Read more: http://www.techtrickhome.com/2013/01/prevent-duplicationdisable-copy-paste.html#ixzz2XgIBls2n

6/20/2013

என்னை கவர்ந்த டாக்டர் நண்பர்கள்


டாக்டர்ஸ் என்றால் எப்படி இருக்கனும்னா நாம் எதிர்பார்க்கிறது இரக்கம், அன்பு அந்த மாதிரி இருக்கிற டாக்டர் Dr. Rawlin Augustine, Nallini Arul, Gayathri Sreekanth இவங்க மூன்று பேருமே செம அன்பு, கனிவு இவங்ககிட்ட ரொம்பவே இருக்கும். அதே மாதிரி எனக்கு முதல் பிரசவம் பார்த்த கீதா அர்ஜீன் ரொம்ப அன்பு, எவ்வளவு முயற்ச்சி செய்தும் சிசேரியன் தான் அதனால எங்களைவிட அவங்களுக்கு தான் ரொம்ப அப்செட். ஏன்னா எங்க (அம்மா) மாமியாருக்கும் அவங்க மாமியார் கல்யாணி தான் பிரசவம் பார்த்தாங்களாம்.. சின்னது பெங்களுரில் கோமதி நாராயணன். ரொம்ப பிரசவம் காம்ளிகேட்லா ஆனதுல 8 மாதம் பிறந்தஉடனேயே ஆபரேஷன் பண்ணி குழந்தையை எடுத்துட்டாங்க. ஆனால் அவங்க கிட்ட அப்படி ஒரு பயம் எனக்கு. என்ன சாப்பிடியா, மருந்து சாப்பிட்டியா என்ற மிரட்டலே இருக்கும். அவங்களை பாக்கும்போது எனக்கு நான் குன்னூரில் இருந்த விக்டர் என்ற டாகடர் ஞாபகம் தான் வரும். எனக்கு வீஸிங் வரும்பொது என்னை  அப்பா தோளில் போட்டு அவர்கிட்ட அழைத்துகொண்டு போவார். டாக்டர் ஊசியை கையில் எடுத்த உடனேயே நான் ஓடிவிடுவேன். பெரும்பாலும் எதிர்தாப்புல வர்ரவங்க தான் பிடித்து குடுப்பார். உடனே என்ன ஊசி தான். அதே இன்று வரை எனக்கு அந்த பயம் பொகவில்லை. என் பையனோ அதுக்கும் மேல பெரியவன் ஊசி குத்துவதைபார்த்துகொண்டே இருப்பான். சின்னது என்னை விட டாக்டரை ஒரே தள்ளு தள்ளி ஓடிவிடுவான். பெங்களுரில் டாக்டர் பெனகப்பா தான் எங்க குடும்ப டாக்டர். இத்தனைக்கும் பெனகப்பா ஊசியே போடமாட்டார். தடுப்பு ஊசி போடும்போது இவ்வளவு ஆர்பாட்டமும் நடக்கும். . அவர் சொல்லிவிடுவார் சுபா நீ நவீன் பெனகப்பா (பையன்) அவரும் டாக்டர் தான் இருக்கும்போது வாம்மா. என்னால் தனிய இவனை பிடிக்க முடியலை என்பார். பசங்களை கூட்டி போயே நானும் நவீனும் செம தோஸ்தாகிட்டோம். பசங்களுக்கு உடம்பு முடியலைனா சில நேரங்களில் ஜீரம் ரொம்ப அதிகமாகி அட்மிட் பண்ணற வரை போய்டும். அந்த சந்தர்பத்தில் சி.பி. எப்போவுமே வெளிநாட்டில் இருப்பார். உடனே நவீனுக்கு போன் செய்து அவரை ராத்திரி 2 மணி கூட இருக்கும். பெங்களுர் ஆஸ்பத்திரி ஆரம்பித்தவர் அவர், நீ வந்துடு நான் வந்துடறேன் உடனே அட்மிட் பண்ணிடலாம் என்பார். அந்த மாதிரி தோள்குடுத்த நண்பர் அவர்தான். இன்றும் இப்போ நிமான்ஸ் ல, சாகர் ல child specialist ஆக இருக்கார். அவர்கிட்ட இப்போவும் உன்னை மாதிரியே அன்பா, கனிவா பேசரவங்களை ரெபர் பண்ணு. என்று கேட்பேன். அப்படிதான் ரவிபிரகாஷ் என்ற கண்டாக்டரும், ருத்ரபிரசாத் என்ற ஆர்த்தோ டாக்டரும் நண்பர்களானார். இவர்களுக்கெல்லாம் பணம் முக்கியமில்லாமல் சேவையாகத்தான் இன்று வரை இருக்கிறார்கள். இன்றும் இவர்கள் மாறவில்லை.  நான் இங்கே இருக்கும்போதே போனில் மட்டும் தான் சொன்னோம் டாக்டர் ரவி கிட்ட, அப்பாக்கு அவரே ஆபரேஷன் பண்ணி அப்படி கவனிச்சுகிட்டார். இப்போ கூட சந்தேகம் நா உடனே ருத்ரபிரசாத்கிட்ட தான் போன் செய்து கேட்கிறது.அதே மாதிரி இங்கு டாக்டர் பீட்டர் கீரீப்பர் எனக்கு நண்பரானார். அவரிடம் தான் நான் செல்வது. இன்னிக்கு விட்டமின் டி குறைபாடால் ஊசி போடனும் என்றார். அவரிடம் டாக்டர் ஊசி வலிக்குமா, எனக்கு மட்டும் ஏன் இதெல்லாம் வருது என்றால் என்று ஒரு பத்துதரம் கேட்டிருப்பேன், சிரித்துகொண்டே மிகவும் பொருமையாக விளக்கிகொண்டிருப்பார். இங்கே வெயிலே இல்லை மா, அதான் இப்படி, ஊசி வலிக்காது என்று குழந்தைக்கு சொல்ற மாதிரி சொல்லிக்கொண்டிருந்தார்.  இன்னிக்கு அவருக்கு வெய்ட் பண்ணின போது இவங்க ஞாபகம் எல்லாம் வந்துச்சு. அனால் இன்னும் ஊசி பயம் மட்டும் போகவில்லை என்னை விட்டு. 

No comments: