Read more: http://www.techtrickhome.com/2013/01/prevent-duplicationdisable-copy-paste.html#ixzz2XgIBls2n

5/23/2013

எனது முதல் தாய்ச்சி வகுப்பு..


சில மறைக்க வேண்டும் என்று நினைக்கும் விஷயங்கள் பகிங்கரப்படுவது போல நேற்று ஒரு சம்பவம். இங்கு இருக்கும் நண்பர்கள் எப்போதும் 15 நாள்களுக்கொரு முறை வீட்டிற்கு வந்து சாப்பிட்டு, கும்மாளமிட்டு தான் திரும்புவார்கள். இந்த தடவை எல்லோரும் ஊருக்கு செல்ல இருப்பதால் அவசரமாக பைனல் பிராஜக்ட் வேலையில்  எல்லோரும் பிஸி. ஒருநாள் தாய்ச்சி பற்றிய பேச்சு வந்தது. தாய்ச்சி இங்கே சீனாவில் யோககலை மாதிரி .அதை நான் கத்துக்கலாம் என்று இருக்கேன் என்றதற்கு இது வயசானவங்க ரோட்டுல கை காலை ஆட்டி ஆட்டி பண்ணறது இது ஒரு உடற்பயிற்சி மாதிரி அதை போய் கத்துக்கபோறியா, அதுவும் நீயே நிறையா யோகா வகுப்பு எல்லாம் சென்றிருக்கிறாய்  என்று உடனே இங்கிருக்கும் குட்டிசாத்தான்கள் முற்றுபுள்ளி வைத்துவிட்டார்கள்.  எனக்கு எப்போவுமே வகுப்புக்களுக்கு செல்வதென்றால் ரொம்ப ஆர்வம். அதுவும் யோகா, தியான வகுப்புக்கள் என்றால் நானும், சி.பி. யும் இந்தியாவில் இருக்கும்போது எல்லா வகுப்புக்களுக்கும் சென்று விடுவோம். நீண்ட நாள்களுக்கு பின் என் சீன தோழி சுபா இந்த புதன்கிழமை ஒரு நாள் மட்டும் தாய்ச்சி வகுப்பு கலந்துக்கோ உனக்கு பிடிக்கலைனா அடுத்த வாரத்திலேருந்து வரவேண்டாம் நானும் உன்னை கட்டாயபடுத்த மாட்டேன் என்றாள் சரி போய்தான் பார்ப்போமே என்றூ நேற்று கிளம்பினேன்.இதுங்ககிட்ட ஒண்ணும் சொல்லலை. ஏன்னா ஒருநாளுக்கு எப்படி இருக்கு நு பார்த்துட்டு வந்துடுவோம் என்று சொல்லாமல் சென்றேன்.  இங்கே இருக்கும் ஆராய்ச்சி மாணவர்கள் எப்போதும் ஆராய்ச்சி கூடத்திற்கு சென்று விட்டால் போன் செய்யமாட்டார்கள். எதாக இருந்தாலும் மெசேஜ் தான் முகநூலில். அதனால் யாரும் நமக்கு கால் பண்ண மாட்டார்கள் என்று கிளம்பிவிட்டேன். அப்போது இந்த பக்கிங்கள்ள ஒன்னு என்னை கால் பண்ணியிருக்கு. உடனே என் பையன் அம்மா தாய்ச்சீ கிளாஸ் போய் இருக்கா என்றதும் உடனே எல்லா பக்கிங்களுக்கும் போட்டு குடுத்தாச்சு முதல் பக்கி. நான் வரும்வரை காத்துகொண்டிருந்துவிட்டு எல்லாத்துக்கும் விஷயம் பரவி சுபா தாய்ச்சி வகுப்பு எப்படி இருந்தது என்று ஒரே காலாய்பு. ஆனால் போனவுடன் தான் தெரிந்தது எதையுமே ஆராயமல் சொல்ல கூடாது நு, காலுடன் கையும் சேர்ந்து 4 திசைகளிலும் சுற்றி கையும், காலும் உடம்பின் எல்லா பாகங்களுக்குமான பயிற்சி. இதை இதுங்க கிட்ட சொன்னா நம்ப மாட்டேங்குதுங்க. 

5/22/2013

ஷின் நியான் குவாய்ல! சீன புத்தாண்டு.!

ஷின் நியான் குவாய்ல!  சீன புத்தாண்டு..

 சுபஸ்ரீ மோகன்

சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்... அது, வசந்த காலம். ஆனால், சீன மக்களுக்கோ கசந்த காலம். 'நியான்' என்ற ஒரு காட்டு விலங்கு சீனாவில் ஒரு கிராமத்தின் மக்களை தினமும் இரவு நேரத்தில் தாக்கியது என்பது பழைய மரபுக்கதை. ஆடு, மாடு போன்ற விலங்குகள் மற்றும் தானியங்களையும் தின்று தீர்த்த அந்த விலங்கு, சின்னஞ்சிறு குழந்தைகளையும் விட்டுவைக்கவில்லை. அந்த ஊர் மக்கள், இரவு என்றாலே பயம் கொள்ள ஆரம்பித்தனர்.

இந்தக் கொடுமையில் இருந்து தப்ப, ஒரு வாய்ப்பை தேடிக்கொண்டு இருந்தனர். ஒரு நாள், சிறு குழந்தை அணிந்திருந்த சிவப்பு உடையையும், எங்கோ எரிந்துகொண்டிருந்த நெருப்பையும் கண்டு, நியான் பயந்து ஓடியதை மக்கள் பார்த்தனர்.

நியானின் கொடுமைகளில் இருந்து தப்ப, சிவப்பு நிற உடைகளையும், நெருப்பையும் காட்டி அதை விரட்டினர்!

பின்னர், ஒவ்வொரு ஆண்டின் வசந்த கால தொடக்கத்திலும், சீன மக்கள் தங்கள் வீடுகளின் முன், சிவப்பு நிற கூண்டு விளக்குகளை வைத்து, சிவப்பு உடைகளையும் அணிய தொடங்கினர்.


இந்த கலாசாரம் தான், இன்றும் வசந்த கால பண்டிகையாகவும், வருட பிறப்பாகவும், கொண்டாடப்படுகிறது!

சீன புத்தாண்டு... ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு விலங்கின் பெயரால் அழைக்கப்படுகிறது. இப்படி 12 விலங்குகளின் பெயரில் ஆண்டுகள் உள்ளன. இந்த ஆண்டின் பெயர் 'டிராகன்'.

சீன வருட பிறப்பை, இந்த ஆண்டு இன்று (ஜனவரி 23) தொடங்கி ஜனவரி 25 வரை கோலாகலமாக கொண்டாடுகிறார்கள்.

நாடே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. வீதி எங்கும் சிவப்பு வண்ண கூண்டு விளக்குகளின் அணிவரிசை, தோரணங்களின் அலங்காரம்!

சிவப்பு மலர்களையும், சிவப்பு வண்ணங்களில் நல்லதைக் குறிக்கும் வாசகங்களையும் கொண்டு, வீடு, தெரு, மற்றும் கடைகளை அலங்கரித்துள்ளனர்.

சிவப்பு வண்ணம் நெருப்பை குறிக்கும். ஆதலால், குழந்தைகளுக்கு பரிசுகள் கூட சிவப்பு நிற உறையில் வைத்து கொடுக்கப்படுகிறது. இந்த விழாவில், பாரம்பரிய நடனமான டிராகன் நடனம் மற்றும் வண்ண வானவெடி வேடிக்கையும் முக்கிய நிகழ்வுகளாகும்.

இந்தப் பண்டிகையின் சிறப்பு அம்சம் என்னவென்றால், அமெரிக்காவில் கொண்டாடப்படும் நன்றி நவிலும் நாள், தமிழகத்தின் காணும் பொங்கல் பண்டிகையைப் போல இது குடும்பங்கள் ஒன்று சேரும் திருநாள் என்பதே.

வருடம் முழுதும் எங்கெங்கோ இருந்தாலும், சீன வருடப் பிறப்பின்போது குடும்பங்கள் ஒன்று சேர்ந்து விருந்துண்டு மகிழ்வது வழக்கம். இந்தத் திருநாளன்று எட்டு அல்லது ஒன்பது உணவு வகைகள் தயாரிக்கப்படுகிறது. எட்டு என்ற எண் - செல்வ செழிப்பையும், ஒன்பது என்ற எண் - நீண்ட ஆயுளையும் குறிக்கிறது.

நகரத்தில் வேலை பார்க்கும் மக்கள், சீன புத்தாண்டின்போது தம் சொந்த ஊருக்கு சென்றுவிடுவதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இந்த சமயத்தில் வர்த்தகம் மற்றும் வணிக பரிமாற்றமும் பாதிக்கபடுகிறது.

இந்த விழா நேரத்தில், இந்தியாவின் தீபாவளியைப் போல், நாடே ஸ்தம்பித்து போகிறது. அரசாங்கமும் தனது விடுமுறை நாட்களை இந்த விழாவுக்கு ஏற்றார்போல் அறிவிக்கிறது.

சீனா மிக அதிகமாக ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்வதால், மற்ற நாடுகள் இதற்கேற்றார்போல் தம் வர்தக பரிமாற்றங்களை அனுசரித்துகொள்கின்றன.

இன்று உலகளவில் நாம் பிரமிக்கும் நாடுகளில் சீனாவும் ஒன்றாக உள்ளது. இந்நாட்டு மக்களின் உழைப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் கலாசார ஒற்றுமைதான் நம் பிரமிப்புக்கு காரணம். சீனப் புத்தாண்டு, இந்த பழமையையும் கலாசார ஒற்றுமையையும் பிரதிபலிக்கிறது.

அனைவருக்கும் ஷின் நியான் குவாய்ல... அதாவது, சீனப் புத்தாண்டு வாழ்த்துகள்!



Posted Date : 17:01 (23/01/2012)Last updated : 15:01 (24/01/2012)

5/15/2013

கோடைகால அரண்மனை.






கோடைகால அரண்மனை.


இந்தஅரண்மனை 1750 இல்சியான்லாங்என்றஅரசரால்கட்டப்பட்டது. பல்வேறுபோர்களினால்சிதைந்தஇந்தமாளிகைபின்னர் 1873ம் ஆண்டுமீண்டும் புதுமைபடுத்தப்பட்டது. பேரரசி சிஷியின் 40வது பிறந்த நாளுக்கான பரிசாக, பேரரசர் குவாங்ஷீ வழங்கியதுதான் ஈ ஹ யுவான் மாளிகை.ஓருபூங்காவாகஇருந்தஇந்தஇடத்தைபேரரசிக்குபரிசளிக்க எண்ணி அதை சிறப்பாக வடிவமைத்தார் பேரரசர்குவாங்ஷீ. சிங்யீபூங்காவாகஇருந்தஇந்த இடமே பின்னர் கோடைக்கால மாளிகையாகமாற்றப்பட்டது.

பெய்ஜிங்கின்மத்தியபகுதியில்இருந்துஒரு 12 கிலோமீட்டர்தொலைவில்வடக்குதிசையில்உள்ளதுஇந்தபூங்கா. ஏரிமற்றும்பூங்காகளினால்சூழப்பட்டிருக்கிறதுஇந்தமாளிகை..இதைசுற்றிகுன்மின்ஏரியும்பலயுகங்களைகடந்தஇந்தமலையும்இருக்கிறது. முதலில்இதைசின்யியுவான்என்றுஅழைத்தார்கள். தெளிவானநீரலைகளின்பூங்காஎன்றும்அழைத்தார்கள். 19 நூற்றாண்டில்இதுகோடைகாலஅரண்மனைஎன்றுபெயர்சூட்டப்பட்டுள்ளது.

கோடைக்கால மாளிகையினுள்ளேஇருக்கும் குன்மிங் ஏரி, பீச் பழத்தின் வடிவத்தில்இருக்கிறது. மாளிகையின்மத்திய பாகத்தில் காணப்படும் 41 மீட்டர் உயர கோபுரம், புத்த ஊதுவத்திகோபுரம் என்று அழைக்கப்படுகிறது. இந்தகோபுரத்தின்பக்கசுவர்கள்வவ்வாலின்இறக்கைகளை போன்ற அமைப்புடன் காட்சியளிக்கிறது. பீச் சீனாவில் நீண்ட வாழ்வினை குறிக்கும் அடையாள சின்னமாகவும், வவ்வால்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையின் சின்னமாகவும் கருதப்படுகின்றன.
பேரரசி சிஷுவைமகிழ்ச்சிப்படுத்த, ஃபூ எனப்படும் மகிழ்ச்சி, லூஎனப்படும் செல்வம், ஷோ எனபது நீண்ட வாழ்க்கையையும் குறிக்குமாறு  இந்த பூங்கா அமைக்கபட்டிருக்கிறது. நெடிய வாழ்க்கை மலை எனப்படும் வான்ஷோ மலையின் அடிவாரத்தில் ஒரு ஏரியைகட்ட செய்தார்குவாங் ஷீ. இந்தமலையின்மேலிருந்துகுன்மிங்க்ஏரியைபார்த்தால்பீச் போலத் தெரியும். அந்தஏரியில் 17 வளைவுகள் கொண்ட ஒரு பாலத்தை காணலாம்.இந்த பாலத்தில் 540 சிங்கங்கள் சித்திரங்களாக செதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிங்கமும் வெவ்வேறு தோரணையில் உள்ளது. இந்த பாலத்துக்கு அருகேஆமை வடிவத்தில் குட்டி குட்டி தீவுகளை உருவாக்கினார் .. இந்த ஆமைகளும்நீண்ட வாழ்க்கை சின்னங்களாக கருதப்பட்டவையே.

ஏரியின் ஒரு கரையில் பிரம்மாண்டமான வெள்ளைப்பளிங்கு ஓடம்அலங்காரத்துடன்கம்பீரமாகநிற்கிறது. சீனத்துஅரசிகள்அங்கே உட்கார்ந்து டீ குடித்தபடிஇந்தஇயற்கைகாட்சியைரசித்தபடிஅமர்ந்திருப்பார்கள். சிலசமயங்களில்அவர்கள்ரசிக்கபடகுகளில்வீரதீரவிளையாட்டுகள்நடைபெறும்.ஏரிகளில்தண்ணீரில்ஏராளமானதாமரைமலர்கள்மலர்ந்திருக்கும்ரம்மியமானகாட்சிமனதைகொள்ளைகொள்கிறது..
இக்கோடைகால அரண்மனையின் எதிரில் குன்மிங் ஏரியும் உள்ளது.அதன் பக்கத்தில் 195 அடி உயரமுள்ல நீண்ட வாழ்நாள் குன்றில் மூன்று அடுக்கு மாளிகை உள்ளது.70,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள அரண்மனை வளாகத்தில் அழகிய கட்டிடங்கள், பூங்காக்கள், மற்றும் கலை மண்டபம் இருக்கிறது.இந்த ஏரி முற்றிலும் செயற்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதில் இருந்த மண்ணை குன்றாக குவித்து அதன் மேல் இந்த அரண்மனையை கட்டியுள்ளார்கள்.கோடை அரண்மனை பூங்காக்களும் ஏரியும் சூழ்ந்த ரம்மியமான இடத்தில் சூரிய ஒளியில் மலர்களின் நறுமணத்தில் மாலை வேலைகளில் பேரரசர்கள் உலா போகும் இடமாகவும் இருந்தது.தோட்டகலை நிபுணர்கள் அழகிய நடைபாதை அமைத்து வண்ன வண்ண தாவரங்கள் பூக்களை பதியமிட்டனர்.  பாக்ஸ்ர் கலகத்தின்போது இந்த குன்றின் மேல் இருந்த அரண்மனையை பிரான்சும், இங்கிலாந்தும் தாக்கியது.1886-1902 ஆம் ஆண்டுகளில் மீண்டும் இந்த பூங்கா புதுப்பிக்கப்பட்டது.

கோடைபூங்காவின்அழகேஅதைசுற்றியிருக்கும்இயற்கைவளங்களானஏரி, மலைமற்றும்பூங்கா தான். கோடைகாலமாளிகையை 4 பாகங்களாகபிரிக்கலாம். தர்பார்பகுதி, முன்மலைபகுதி, பின்மலைபகுதிமற்றும்ஏரிபகுதி.தர்பார்பகுதிஇந்தஅமைப்பின்வடகிழக்குதிசையில்உள்ளது. அரண்மனைவாயில்கிழக்குவாயிலில்லிருந்துகுன்மின்ஏரியின்வடகிழக்குகரைவரைஅமைந்துள்ளது.  இங்கேதான்குவான்சூசக்ரவர்த்தி, அவரின்ராணி, அரசுஅலுவலர்கள்எல்லோரும்அரசவிவாதங்கள், சிலமுக்கியநிகழ்வுகளில்கலந்துகொண்டனர்.அரண்மனையில்வேலைசெய்பவர்களும்இங்கேதான்வசித்தனர். அவர்களுக்கென்றுதனிஇடம்இருந்தது. .
உலகத்தின் சிறந்த பூங்காக்களில் ஒன்றான கோடைக்கால மாளிகை சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கிறது.
நீண்ட வாழ்நாள் குன்றின் மேல் டோபோ கிளேஸ்டு பகோடா என்ற புத்தர் கோயில் உள்ளது.1998 டிசம்பர் யுனெஸ்கோ இந்த கோடைகால மாளிகையை உலக பழக்கால மாளிகை என்று அறிவித்தது.