Read more: http://www.techtrickhome.com/2013/01/prevent-duplicationdisable-copy-paste.html#ixzz2XgIBls2n

3/10/2013

மகளிர் தினம்






மகளிர் தினம் மகளிர் தினம் என்று
நாளிதழ்களில் விளம்பரம் இரண்டு நாட்களாகவே
சில இடங்களில் மகளிர் கருத்தரங்கங்கள்
பக்கம் பக்கமாக நடந்துகொண்டிருக்க
வசதியானவர்களை பேட்டி எடுக்க தொலைகாட்சி

போட்டியிட ,நாளிதழ்களும் முன்வழியை தொடர
நடுத்தரவர்கத்து கீதா மட்டும் காலையில் அவசரமாக
குடும்பத்திற்கான சமையலை செய்துவிட்டு அலுவலகத்திற்கு கிளம்ப
இரவு நேரத்திற்கு என்ன செய்வது என்ற யோசனையில்
பஸ்ஸில் வீட்டிற்கு பயணம் ’
இன்னொரு மூலையில் நிஜாமாவே வந்துவிட்ட காய்சலால்
ஒரு நாள் விடுப்பு கேட்ட கண்ணம்மாவிற்கோ
வீட்டுக்கார அம்மாள் மகளிர் விழாபற்றி பேசவேண்டியுள்ளது
அதனால் இன்னிக்கு விடுப்பு கேட்காதே என்ற கத்தலுடன்
மறுத்தால் மாதசம்பளம் கைக்குவராதே
என்ற கவலையில் முனங்களுடன் பாத்திரம் தேய்க்கும்
கண்ணம்மாவிற்கும் கீதாவிற்கும் இப்படித்தான் கழிந்தது,மகளிர் தினம்!!  

3 comments:

ezhil said...

அருமையான பார்வை. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் தோழி...

Unknown said...

Arumaiyana sharing Mam

Nubia said...

hello
i am the designer of this card - the card you published heve been resized - please remplace it by my original size you can save here
http://i282.photobucket.com/albums/kk274/Nubia002/Women/HappyWomensDay.jpg

thank you
Nubia