Read more: http://www.techtrickhome.com/2013/01/prevent-duplicationdisable-copy-paste.html#ixzz2XgIBls2n

8/19/2013

நாஞ்சிங்












நான்சிங் முதலில் சீனாவில் தலை நகராக இருந்தது. அதனால் தலைநகரத்திற்குரிய கம்பீரம் சிறிது குறையாமல் மூன்று மன்னர் பரம்பரையினர் ஆட்சி செய்த இடமாகும்.
டாக்டர் சன்யாட் சென் நினைவாலயம்..
இருபதாம் நூற்றாண்டில் சீனாவில் ஒரு முக்கிய தலைவராக கருதப்பட்டவர். இவரது மூன்று முக்கிய கொள்கைகள். தேசியவாதம், குடியரசு, மக்களின் வாழ்வாதாரம் . ஆப்ரகாம் லிங்கனின் கருத்துக்கள் இவரை ரொம்ப கவர்ந்தது. இவர் ஹாங்காங்கில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் சில இளைஞர்களில் இவரும் ஒருவர். மருத்துவராக பணிபுரிந்தாலும் பொதுவாழ்வில் மிகவும் ஆர்வம் இருந்தது. இவருக்காக கட்டப்பட்ட இந்த நினைவாலயம் 1929 ஆண்டு கட்டப்பட்டது.  இயற்கையான நீலமலையில் சுற்றிய இடங்களில் எல்லாம் பச்சை பசேலென்ற இயற்க்கை காட்சிகள் கண்ணுக்கு விருந்தளிக்கின்றன. நீல மலை, மிங் கல்லறை எல்லாம் ஒரே இடத்தில் இருப்பதால் எல்லா மக்களும் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.

மிங்ஷியாவ்லிங் நினைவாலையம்.
மிங்ஷியாவ்லிங் பேரரசர் ஜீயுவாங்ஜாங் என்ற மிங் வம்சத்தை சேர்ந்த பேரரசரின் நினைவாலயம். இது சுமார் 600 வருடப் பழமையான கட்டிடம். இந்த நினைவாலயத்திற்கு இரு பிரிவுகள் உள்ளன. இதை சுற்றி 45 கி.மீ சுற்றளவில் கல் சுவர் உள்ளது. விலங்குகளின் சிலைகள் இந்த நினைவாலயத்தை பாதுகாப்பது போல வடிவமைத்துள்ளார்கள். இங்கு மன்னர் தன் அமைச்சர்களுடன், படை தளபதிகளுடன் வலம் வருவதாக நம்பிக்கை இன்றும் உள்ளது. இந்த நினைவாலயம் சிவப்பு வர்ணத்தில் காண்பதற்கு கம்பீர அழகோடு காட்சியளிக்கிறது.

குடியரசு தலைவர் மாளிகை.
குடியரசு தலைவரின் மாளிகை ஒரு பிரம்மாண்டமான கட்டிடம். தாய்பிங் வம்சத்து மன்னரும், 20 நூற்றாண்டின் குடியரசு தலைவர்களும் இந்த மாளிகையில் வசித்து வந்தார்கள். அவர்கள் உபயோகித்த மேஜை நாற்காலிகள், தாய்பிங் காலத்திலிருந்து 20 நூற்றாண்டு வரை உள்ள மேஜை மரத்தாலான அலங்கார சின்னங்களும் இங்குள்ள ரகசிய அறையில்பத்திரப்படுத்தி பாதுகாக்கபட்டு வருகிறது. 1911 ஆண்டு டாக்டர் சன்யாட்சென்னும் இந்த மாளிகையில் வசித்துவந்துள்ளார்.
லிங்கு டெம்பிள்.
புத்த மதகோவில் இது நீலமலையில் இருக்கிறது. லிங்கு கோவில் இடிக்கப்பட்டு சில நினைவாலயங்கள் கட்டப்பட்டன. ஆனால் பின் லிங்கு கோவில் மறுபடியும் திரும்ப கட்டப்பட்டது. இந்த கோவில் வளாகத்தில் மூன்று கட்டிடங்கள் உள்ளது. இங்கிருக்கும் புத்த விக்கிரகம் சீன துறவி இந்தியாவிலிருந்து புத்தமத சித்தாந்தங்களையும் கோட்பாடுகள் கொண்ட வரைபடங்கள், புத்தரின் உருவசிலை எல்லாவற்றையும் எடுத்து வந்து இங்கு புத்த மதத்தை தனது சீடர்களுக்கும் சொல்லி குடுத்து இந்த கோவிலை கட்டினார்.
சன்யாட்சென்னின் நினைவாலயம், லிங்கு டெம்பிள், மிங்ஷியாவ்லிங் நினைவாலயம் மூன்றும் ஒரே வளாகத்தில் உள்ளது. பார்வையாளர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு சென்று பார்க்க சைக்கிள், பேருந்து, எலக்ட்ரிக் கார் வசதிகளும் இருக்கிறது.

நாஞ்சினில் ஜப்பானியர்களினால் இறந்தவர்களின் நினைவாலயம்.
1937 ஆம் ஆண்டு ஜப்பானியர்கள் ஷாங்காயிலிருந்து நாஞ்சினுக்கு வந்து போரிட்டு பொதுமக்களை எல்லாம் கொன்று குவித்தார்கள்.  இந்த ஜப்பானிய படைதுருப்புகளால் 3 லட்சம் மக்கள் இறந்துள்ளனர். 20,000 பெண்கள் மானபங்க படுத்தப்பட்டுள்லனர். இந்த இடத்தில் இறந்தவர்களது எலும்பு கூடுகள் பத்திரப்படுத்தி, இறந்தவர்களின் பெயர்கள் எழுதிய நினைவு தூண்களும், அவர்களை பற்றிய குறிப்புகளும் காணபெறுகின்றன. இந்த வரலாற்றில் இது மறக்கபடாத ஒன்று.


Terracotta warrier சுடு மண் சிற்பங்கள்









1974 ஆம் வருடம் விவசாயிகள் தங்களது விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய மண்ணை வெட்டினார்கள். அப்போது தலை, கை, கால் உடம்பு என்று தனிதனி அவய உருப்புகள் கிடைத்தன. விவசாயிகள் பயந்து விட்டார்கள். திரும்ப , திரும்ப தோண்டிய போது அத்துடன் இரும்பு உலோகங்களும், களிமண்ணால் செய்த அவயங்களும் இடையிடையே கத்தி, ஈட்டி, அம்பு போன்ற ஆயுத பொருள்களும் மாறி மாறி வந்து கொண்டிருந்தன.

இது பிசாசின் செயலாக இருக்குமோ என்று நினைத்து சீன அரசாங்கத்திடம் முறையிட்டனர் விவசாயிகள். பின் சீன அரசாங்கம் அந்த இடத்தை அகழ்வாராய்ச்சி பணியில் நிபுணர் குழுக்களை ஆராயும் பணியை ஒப்படைத்தது. அப்போது தான் சீனாவின் மற்றொருஅதிசிய உலகத்தின் கதவு திறந்தது.  கி.மு. 246 ம் ஆண்டு சைனாவின் சின் வம்சத்தைசேர்ந்த பதிமூன்று வயது பாலகன் அரியனை ஏறினான். பாலகன் என்றாலும் மிகவும் திறமைசாலி. பலருடன் போரிட்டு எல்லா இடங்களையும் தன்னாட்டுடன் இணைத்துக்கொண்டான். சி ஷி ஹுவாங் என தன்னை அழைத்துக்கொண்டான். சில நல்ல செயல்களையும் செய்தான். நாணயத்தை தேசியமயமாக்கினான். எடை கற்களையும் கண்டுபிடித்தான்.

அளவுக்கதிகமான எதிர்பால் விளைந்த பயத்தால் எந்த நேரமும் தாம் இறப்போம் என்றெண்ணிதன் இறப்புக்கு பின்னும் இறவா வாழ்வு வாழ எண்ணினான். சுமார் ஏழு லட்சம் பணியாளர்களை கொண்டு 39 ஆண்டுகளாக ஒரு பிரம்மாண்டமான அரண்மனையை பூமிக்குள் உருவாக்கினான் விவசாயிகள், போர் வீரர்களை மாடலாக நிற்க வைத்து சுடுமண் சிற்பம் செய்ய சொல்லி ஆணையிட்டான். சுடுமண் வீர்ர்களின் சிலை மேல் இரசாயன பூச்சும், சாயமும் பூசப்பட்டதால் கத்தி போன்ற ஆயுதங்கள் இன்று வரை துருபிடிக்காமல், அதன் கூர்மை தன்மை மாறாமல் இருக்கிறது.அவன் இறந்தவுடன் அவனது உடலை பாதுகாக்கவும், அவன் திரும்ப வரும்போது இந்த வீர்ர்கள் தமக்கு பணிவிடை செய்வார்கள் என நம்பினான். மூன்று கூடாரங்களில் சுமார் ஏழாயிரம் சிப்பாய்கள் அணிவகுத்து நிற்கும் காட்சி சீனாவின் மரபு செல்வ பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.



இன்றும் இந்த மன்னனின் கல்லறையை தோண்ட போதிய அளவு அறிவியல் தொழில் நுட்பம் தெரியவில்லை, ஏனெனில் அரசனின் கல்லறையை சுற்றி மெர்குரி லிக்விட் இருப்பதால் அதற்கு போதிய அளவில் பாதுகாப்பு உபகரணங்கள் தேவை என்று சொல்லுகிறார்கள். அதற்கான முயற்ச்சியில் ஆராய்ச்சி குழு தீவிரத்துடன் உழைத்து வருகிறது.