Read more: http://www.techtrickhome.com/2013/01/prevent-duplicationdisable-copy-paste.html#ixzz2XgIBls2n

5/15/2013

கோடைகால அரண்மனை.






கோடைகால அரண்மனை.


இந்தஅரண்மனை 1750 இல்சியான்லாங்என்றஅரசரால்கட்டப்பட்டது. பல்வேறுபோர்களினால்சிதைந்தஇந்தமாளிகைபின்னர் 1873ம் ஆண்டுமீண்டும் புதுமைபடுத்தப்பட்டது. பேரரசி சிஷியின் 40வது பிறந்த நாளுக்கான பரிசாக, பேரரசர் குவாங்ஷீ வழங்கியதுதான் ஈ ஹ யுவான் மாளிகை.ஓருபூங்காவாகஇருந்தஇந்தஇடத்தைபேரரசிக்குபரிசளிக்க எண்ணி அதை சிறப்பாக வடிவமைத்தார் பேரரசர்குவாங்ஷீ. சிங்யீபூங்காவாகஇருந்தஇந்த இடமே பின்னர் கோடைக்கால மாளிகையாகமாற்றப்பட்டது.

பெய்ஜிங்கின்மத்தியபகுதியில்இருந்துஒரு 12 கிலோமீட்டர்தொலைவில்வடக்குதிசையில்உள்ளதுஇந்தபூங்கா. ஏரிமற்றும்பூங்காகளினால்சூழப்பட்டிருக்கிறதுஇந்தமாளிகை..இதைசுற்றிகுன்மின்ஏரியும்பலயுகங்களைகடந்தஇந்தமலையும்இருக்கிறது. முதலில்இதைசின்யியுவான்என்றுஅழைத்தார்கள். தெளிவானநீரலைகளின்பூங்காஎன்றும்அழைத்தார்கள். 19 நூற்றாண்டில்இதுகோடைகாலஅரண்மனைஎன்றுபெயர்சூட்டப்பட்டுள்ளது.

கோடைக்கால மாளிகையினுள்ளேஇருக்கும் குன்மிங் ஏரி, பீச் பழத்தின் வடிவத்தில்இருக்கிறது. மாளிகையின்மத்திய பாகத்தில் காணப்படும் 41 மீட்டர் உயர கோபுரம், புத்த ஊதுவத்திகோபுரம் என்று அழைக்கப்படுகிறது. இந்தகோபுரத்தின்பக்கசுவர்கள்வவ்வாலின்இறக்கைகளை போன்ற அமைப்புடன் காட்சியளிக்கிறது. பீச் சீனாவில் நீண்ட வாழ்வினை குறிக்கும் அடையாள சின்னமாகவும், வவ்வால்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையின் சின்னமாகவும் கருதப்படுகின்றன.
பேரரசி சிஷுவைமகிழ்ச்சிப்படுத்த, ஃபூ எனப்படும் மகிழ்ச்சி, லூஎனப்படும் செல்வம், ஷோ எனபது நீண்ட வாழ்க்கையையும் குறிக்குமாறு  இந்த பூங்கா அமைக்கபட்டிருக்கிறது. நெடிய வாழ்க்கை மலை எனப்படும் வான்ஷோ மலையின் அடிவாரத்தில் ஒரு ஏரியைகட்ட செய்தார்குவாங் ஷீ. இந்தமலையின்மேலிருந்துகுன்மிங்க்ஏரியைபார்த்தால்பீச் போலத் தெரியும். அந்தஏரியில் 17 வளைவுகள் கொண்ட ஒரு பாலத்தை காணலாம்.இந்த பாலத்தில் 540 சிங்கங்கள் சித்திரங்களாக செதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிங்கமும் வெவ்வேறு தோரணையில் உள்ளது. இந்த பாலத்துக்கு அருகேஆமை வடிவத்தில் குட்டி குட்டி தீவுகளை உருவாக்கினார் .. இந்த ஆமைகளும்நீண்ட வாழ்க்கை சின்னங்களாக கருதப்பட்டவையே.

ஏரியின் ஒரு கரையில் பிரம்மாண்டமான வெள்ளைப்பளிங்கு ஓடம்அலங்காரத்துடன்கம்பீரமாகநிற்கிறது. சீனத்துஅரசிகள்அங்கே உட்கார்ந்து டீ குடித்தபடிஇந்தஇயற்கைகாட்சியைரசித்தபடிஅமர்ந்திருப்பார்கள். சிலசமயங்களில்அவர்கள்ரசிக்கபடகுகளில்வீரதீரவிளையாட்டுகள்நடைபெறும்.ஏரிகளில்தண்ணீரில்ஏராளமானதாமரைமலர்கள்மலர்ந்திருக்கும்ரம்மியமானகாட்சிமனதைகொள்ளைகொள்கிறது..
இக்கோடைகால அரண்மனையின் எதிரில் குன்மிங் ஏரியும் உள்ளது.அதன் பக்கத்தில் 195 அடி உயரமுள்ல நீண்ட வாழ்நாள் குன்றில் மூன்று அடுக்கு மாளிகை உள்ளது.70,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள அரண்மனை வளாகத்தில் அழகிய கட்டிடங்கள், பூங்காக்கள், மற்றும் கலை மண்டபம் இருக்கிறது.இந்த ஏரி முற்றிலும் செயற்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதில் இருந்த மண்ணை குன்றாக குவித்து அதன் மேல் இந்த அரண்மனையை கட்டியுள்ளார்கள்.கோடை அரண்மனை பூங்காக்களும் ஏரியும் சூழ்ந்த ரம்மியமான இடத்தில் சூரிய ஒளியில் மலர்களின் நறுமணத்தில் மாலை வேலைகளில் பேரரசர்கள் உலா போகும் இடமாகவும் இருந்தது.தோட்டகலை நிபுணர்கள் அழகிய நடைபாதை அமைத்து வண்ன வண்ண தாவரங்கள் பூக்களை பதியமிட்டனர்.  பாக்ஸ்ர் கலகத்தின்போது இந்த குன்றின் மேல் இருந்த அரண்மனையை பிரான்சும், இங்கிலாந்தும் தாக்கியது.1886-1902 ஆம் ஆண்டுகளில் மீண்டும் இந்த பூங்கா புதுப்பிக்கப்பட்டது.

கோடைபூங்காவின்அழகேஅதைசுற்றியிருக்கும்இயற்கைவளங்களானஏரி, மலைமற்றும்பூங்கா தான். கோடைகாலமாளிகையை 4 பாகங்களாகபிரிக்கலாம். தர்பார்பகுதி, முன்மலைபகுதி, பின்மலைபகுதிமற்றும்ஏரிபகுதி.தர்பார்பகுதிஇந்தஅமைப்பின்வடகிழக்குதிசையில்உள்ளது. அரண்மனைவாயில்கிழக்குவாயிலில்லிருந்துகுன்மின்ஏரியின்வடகிழக்குகரைவரைஅமைந்துள்ளது.  இங்கேதான்குவான்சூசக்ரவர்த்தி, அவரின்ராணி, அரசுஅலுவலர்கள்எல்லோரும்அரசவிவாதங்கள், சிலமுக்கியநிகழ்வுகளில்கலந்துகொண்டனர்.அரண்மனையில்வேலைசெய்பவர்களும்இங்கேதான்வசித்தனர். அவர்களுக்கென்றுதனிஇடம்இருந்தது. .
உலகத்தின் சிறந்த பூங்காக்களில் ஒன்றான கோடைக்கால மாளிகை சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கிறது.
நீண்ட வாழ்நாள் குன்றின் மேல் டோபோ கிளேஸ்டு பகோடா என்ற புத்தர் கோயில் உள்ளது.1998 டிசம்பர் யுனெஸ்கோ இந்த கோடைகால மாளிகையை உலக பழக்கால மாளிகை என்று அறிவித்தது.

No comments: