Read more: http://www.techtrickhome.com/2013/01/prevent-duplicationdisable-copy-paste.html#ixzz2XgIBls2n

6/24/2013

ஹாங்காங் (Hong Kong)

ஹாங்காங் (Hong Kong)


வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் நாடுகளில் ஹாங்காங்கும் ஒன்று. இரவு நேரங்களில் வண்ண விளக்குகளால் தன்னை அலங்கரித்துகொள்ளும் ஹாங்காங் தொடர்ந்து வளர்ச்சி அடையும் நாடுகளில் ஒரு முக்கியமான நாடாக கருதப்படுகிறது. பிரிட்டன் வசம் இருந்த ஹாங்காங்கை திரும்ப சீனாவிற்க்கு தந்துவிட்டாலும் ஹாங்காங்கிற்கு ஓரளவு தன்னாட்சி அதிகாரத்தை வழங்கியுள்ளது சீனா. ஒரு நாடு இரு அமைப்பு என்ற முறையில் படிபடியாக கம்யூனிஸத்தை அமல்படுத்தி வருகிறது.

பிரிட்டனின் தாக்கத்தால் இந்த சீன மக்களுக்கு ஆங்கிலம், காண்டனீஸ், போர்ச்சுகீசியம், மாண்டரின் தெரிந்திருக்கிறது. இந்தியர்கள் பிரிட்டன் ஆட்சி காலத்திலேயே ஹாங்காங்கில் வாணிகம், தொழில்கள் செய்து குடியுரிமை பெற்று வாழ்க்கிறார்கள். ஹாங்காங் ஏர்போர்ட் கடலும், மலைகளும் சூழ்ந்த விமான பாதை தளமாக இயற்கையுடன் இணைந்து காணப்படும் விமான நிலையம் ஆகும். இயற்கையிலேயே மலைத்தொடர்களும் மலைக் குன்றுகளுமாகும்.ஆன இந்த பிரதேசத்தை  செதுக்கி செதுக்கி கடல் பரப்பை நிரப்பியும் சில மலைகளையே தரைமட்டமாக்கி மணல் நிரவி ஹாங்காங் தற்போதைய தோற்றத்தைப் பெற்றுள்ளது.

சுற்றுலா தொழில்கள் மிக அபரிதமாக வளர்ந்து வருகிறது. 1998 ஆண்டில் தொடங்கிய மிகப்பெரிய டிஸ்னிலேண்ட் கட்டப்பட்டு 2003 திறப்பு விழா நடத்தப்பட்டது. மாலை வேளைகளில் ஹாங்காங் துறைமுகத்தை ஒட்டிய சொகுசு கப்பல் சாவாரியும், மின்விளக்குக் காட்ச்சிகளும் மனதை ரம்மியக்க வைக்கும்.

ஹாங்காங்கில் ரயில்வே நிலையத்தில் சென்டிரலில் இருந்து சிறிது தூரம் சென்றவுடன்  விக்டோரியா பீக் என்ற இடத்திற்க்கு இருக்கும் மெழுகு சிலையை பார்ப்பதற்கு மலைபாதையில் செல்ல டிராம் வண்டி இருக்கிறது. வண்டிபாதை மலைபகுதிகளில் பயணிப்பதினால் நாமும் இயற்கையை ரசித்து கொண்டு செல்லலாம். மேலே செல்ல செல்ல என்ன உயரத்தில் பயணிப்பது ஒருவகையான சந்தோசம் தான். ஏதோ ஒரு வகை பயத்தில் நாம் இன்னும் இருக்கமாக ஒட்டுக்கொண்டு நம் இருக்கையை பிடித்துகொண்டிருப்போம் எங்கே விழுந்துவிடுவோமோ என்று. இங்கு அப்படியே பயணத்தின் போதே இந்த தீவின் அழகையும் வானவீதியில் பலவகையான மககூட்டங்களின்  வர்ணஜாலங்களை ரசித்துவிடலாம்.

அந்த இடத்தை அடைந்தவுடன் அங்கு கண்கவரும் ஓவியங்கள், கைவினை பொருள்கள், எல்லாம் கிடைக்கின்றன. முதலில் இங்கு உள்வருவதற்கு முன் வாயிலிலேயே ஒருவர் கையை கட்டிகொண்டு நின்றிருந்தார்.  நாங்கள் அவரை நிஜமாக ஒருத்தர் நின்றுகொண்டிருக்கிறார் என்று நினைத்தோம். என்னடா ஆடாமல் அசையாமல் இருக்கிறாரே என்று நினைத்தால் அவரும் மெழுகு சிலை என்று புரிந்து அட என்று ஆச்சரியப்படாமல் எங்களால் இருக்க முடியவில்லை. பூரூஸ்லி, ஜாக்கிசான், பீட்டில்ஸ், காந்திஜி,மாவோ, டயானா, ஐஸ்டின், அமிதாப்பட்சன், போன்றவர்களின் உருவங்கள் தத்ரூபமாக வியக்க வைக்கிறது.

நோவாவின் பேழை என்ற இடம் மாவன் தீவில் உள்ளது. இது சென்ட்ரலில் இருந்து கடல் வழியாக மட்டுமே பயணிக்கலாம். பைபிளின் பழைய ஏற்பாட்டில் அதிகாரம் 6-7 களில், நோவாவின் கதை வருகிறது. அக்கதையின் படி மனிதனது பாவச் செயல்கள் பூமியில் அதிகரித்ததால், கோபமுற்றக் கடவுள் எல்லோரையும் அழிக்க வேண்டும் என பிரளயத்தை உண்டுப்பன்னுகிறார். ஆனால் நீதித்தவறாத ஒரே மனிதனான நோவாவையும் அவனது குடும்பத்தினரையும் மட்டும் எப்படியாவது காப்பாற்ற எண்ணிய  கடவுள் நோவாவிற்கு ஒரு கட்டளையிடுகிறார். அந்தக்கட்டளையின் படி நோவாவால் கட்டப்பட்ட கப்பல் "நோவாவின் கப்பல் அல்லது நோவாவின் பேழை என்பதாகும். கப்பலை நோவா கட்டியவுடன் நோவாவையும், நோவாவின் குடும்பத்தாரையும், உலகில் உள்ள உயிரினங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ஜோடி விலங்குகள், பறவைகள், ஊர்வன என நோவாவின் கப்பலுக்குள் ஏற்றிக்கொண்டு மூடிக்கொள்ளும் படி கடவுள் கட்டளை இடுகிறார். அதனைத் தொடர்ந்து 40 நாட்கள் இடைவிடாத கடும் மழை, கடல் நீர் மட்டம் மலை முகடுகளுக்கும் மேலாக உயர்கின்றது.

அந்த வெள்ளப்பெருக்கில் உலகில் உள்ள உயிரினங்கள் எல்லாம் அழிந்து போகின்றன. ஆனால் நோவாவும், அவரது குடும்பத்தாரும், கப்பலில் இருந்த விலங்குகள் மட்டுமே உலகில் மிஞ்சுகின்றது. கடல் நீர் மட்டம் வடிந்து இயல்பு நிலை தோன்றுகிறது. நோவாவின் குடும்பத்தாருடன், மிருகங்களும், பறவைகளும் கப்பலை விட்டு வெளியேறுகின்றன." என்பது பைபிள் கூறும் கதையாகும். பைபிளில் குறிப்பிட்டுள்ளதைப் போன்றே நோவாவின் பேழையை, பார்வைக்கு மரப்பலகை வடிவில் கட்டப்பட்டுள்ளது. நோவாவின் கதையில் கூறப்பட்டுள்ளதைப் போன்றே, வெள்ளப் பெருக்கில் இருந்து தப்பிய ஒவ்வொரு ஜோடி மிருகங்களையும் பறவைகளையும், ஊர்வனவைகளையும் தத்ரூபாமாக உருவாக்கியுள்ளனர். இந்த விலங்குச் சிற்பங்கள் உயிருள்ளவை போன்றே காணப்படுகின்றன. கிட்டத்தட்ட 70 க்கும் மேற்பட்ட ஜோடி  விலங்கினங்கள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு விலங்குகளும் அதனதற்கே உரிய உருவ அளவில், அதனதற்கே உரிய நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த சிற்ப விலங்குப் பூங்காவைச் சுற்றி 1000 திற்கும் அதிகமான மரங்களை நட்டு இயற்கையைப் போலவே செயற்கையாய் உருவாக்கியிருக்கின்றனர். இவ்வாறான சிற்ப விலங்குப் பூங்கா இதுவே உலகில் முதன்மையானது ஆகும்.

இந்த நோவாவின் கப்பல் ஐந்து தளங்களைக் கொண்டுள்ளது. நிலத்தளமும், நிலத்தலத்திற்கு மேல் மூன்று தளங்களும், நிலத்தடியில் ஒரு தளமுமாக, மொத்தம் ஐந்து தளங்களாகும். நில மட்டத்தளத்தில் நோவாவின் மண்டபம் இருக்கின்றது. இதில் நோவாவின் கப்பல் வெள்ளப் பெருக்கின் போது சிக்குண்டு கரைச்சேர்வது போன்ற திரைப்படம், 180 டிக்ரி அகன்ற திரையில் காண்பிக்கப்படுகின்றது. உலகச் சுகாதார கேடுகளினால் விளையும் பாதிப்புகளை விவரிக்கும் 4D திரைப்படம் ஒன்றும் காண்பிக்கப்படுகின்றது. உள்ளே நிழல்படம், ஒளிப்படம் எடுப்பது தடைச் செய்யப்பட்டுள்ளது.

நோவாவின் பேழைக்கு செல்லும் உல்லாசப் பயணிகளுக்கு விவரித்துக் கூறும், நோவாவின் பேழை பணியாளர்கள் உள்ளனர். ஆங்கிலம்  மற்றும் காண்டனீஸ் மொழிகளில் விவரிப்பாளர்கள் உள்ளனர்.

1982 புதிய உலக குழுமம் அன்ற நிறுவனம் சிம் சா சுயி கிழக்கில் கடலை ஒட்டிய நிலப்பரப்பில் அவென்யூ ஆப் ஸ்டார் என்ற இடத்தில் உள்ள சாலையை உருவாக்கியது.  இரவு நேரங்களில் மின்சார கதிர்விச்சின் விளக்கொளிகளின் அலங்கார வடிவமைப்புக்களையும் ரசித்துகொண்டே நடக்கலாம். இங்கு சில குறிப்பிட்ட முக்கியமான நாட்களில் வண்ண வான வெடி காட்சியும், மக்கள் வண்ண கதிர்வீச்சின் காட்சியையும் இந்த அவென்யூ ஆப் ஸ்டாரின் சாலையில் இருந்து ரசிப்பார்கள் அப்போது கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்விடும். ஏராளமான் வெளிநாட்டினர் இதன் பார்த்து ரசித்த வண்ணம் அமர்ந்திருக்கும் காட்சியை காண முடிகிறது.

இந்த சாலையில் புகைபிடிக்க கூடாது, செல்ல பிராணிகளை அழைத்து செல்ல முடியாது, சைக்கிள், வண்டி எதுவும் இங்கு ஓட்டிச்செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மீறினால அபராத தொகை அதிக அளவில் இருக்கும். இந்த சாலையில் ப்ரூஸ்லியின் வெங்கல உருவ சிலையையும், இந்த சாலையின் நிலப்பரப்பில் ஜாக்கி சான், ஜெட்லி, போன்ற நட்சத்திரங்களின் கைதடங்களும், அவர்களின் பெயர்களுடன் கூடிய கையொப்பமும் பதித்துள்ளனர்.

இந்த வீதியில் திரைப்பட துறைச் சார்ந்த, படப்பிடிப்பாளர் சிலை, மின்விளக்கை ஏந்தி நிற்கும் உதவியாளர் சிலை, படப்பிடிப்பின் போது நடிகைகள் அமருவதற்கான வெங்கலக் கதிரை,  மற்றும் திரைப்பட படப்பிடிப்புகளின் போது பயன்படும் உபகரணங்களின் மாதிரி வடிவங்கள், காணப்படுகின்றன ஒரு திறந்தவெளி அரங்கில் கலை நிகழ்ச்சிகள் இடம் பெறும். இந்த திறந்தவெளி அரங்கின் முன்பாக உள்ள கட்டடத்தில் ஒரு பெரிய தொலைக்காட்சியில் ஹாங்காங்  நட்சத்திரங்கள் தொடர்பான நிகழ்ச்சிகள் ஒலிபரப்பபடும்.

ஹாங்காங் பூங்கா நகரத்தின் நடுவே இயற்கை எழிலுடன் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு பெரிய பூங்காவாகும். இதன் நிலப்பரப்பளவு 80,000 ஆயிரம் சதுர கிலோ மீட்டர்களாகும். பிரிட்டன் ஆட்சியில் இருக்கும் போது கட்டப்பட்ட இந்த பூங்கா தற்கால வசதிகளுடன் கட்டுவிக்கப்பட்ட பூங்காவின் உள்ளேயே அருங்காட்சியங்கள், திருமணப் பதிவகம், உணவகம், நீர்வீழ்ச்சி குகை, பறவைகளில் இருப்பிடம் என்று ஏராளாமான பகுதிகள் இருக்கின்றன. இது உள்நாட்டு, மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் கவரும் இடமாக உள்ளது.




தியன் தான் புத்தர்

இந்த புத்தர் சிலையின் கட்டுமாணப் பணிகள் 1990ம் ஆண்டு  ஆரம்பித்தன. 1993 டிசம்பர், 29ம் தேதி இதன் கட்டு பணிகள் நிறைவுற்றது. இந்த புத்தரின் சிலை ஒரே முழுச்சிலையாக அல்லாமல், 202 துண்டுகளாக செய்யப்பட்டு, பின்னர் தற்போது சிலை வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் கொண்டுவந்து பொருத்தப்பட்டது. அத்துடன் இந்த சிலையை தாங்கும் திறனுக்கு ஏற்ப உறுதியான இரும்பு வலையங்கள் அமைக்கப்பட்டே சிலையை வைக்கப்பட்டது. சிலை பொருத்தப்பட்டதன் பின்னர் உலகெங்கும் உள்ள பௌத்தப் பிக்குகள் அழைக்கப்பட்டு திறப்பு விழா நடாத்தப்பட்டது. திறப்பு விழாவின் போது சிறப்பு விருந்தினர்களாக சீனா ஹாங்காங், தாய்வான, இந்தியா, ஜப்பான, கொரியா, ற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்தும் வந்து விழாவை சிறப்பித்தனர். மூன்று மாடி கட்டிடங்களில் வட்டவடிவிலான வெங்கலத்திலான தமரை பூவின் மேல் புத்தர் அமைந்திருக்கும் சிலை அமைப்பு இருக்கிறது. முதலாவது தளத்தில் தேவர்கள் புத்தருக்கு விளக்கு, பழம் போன்றவற்றை அர்பணிக்கும் உருவங்களும் உள்ளது.

இந்த புத்தர் சிலையடிக்கு 268 படிகள் உள்ளன. இருப்பினும் அங்கவீனர்கள் மற்றும் வயோதிபர் போன்றோர் செல்வதற்கான வசதியும் உள்ளது. புத்தரின் மார்பில் ஸ்வஸ்திக் சின்னமும் இருந்த்து. புத்தர் முகம் வடக்கு நோக்கி திரும்பியதாக இருக்கிறது. இந்த புத்தர் கோவிலுக்கு கேபிள் கார் மூலமாக செல்லலாம். இந்த பயணம் 5.7. கிலோ மீட்டர் நீளமுடையவை. அடர்ந்த காட்டிலும், மலைபாதைகளிலும் கட்டப்பட்ட இந்த கேபிள் கார் இணைப்புக்கள்  மலையில் குறுக்கிலும் வளைந்தும், நெளிந்தும் காணப்படுகிறது. ஒவ்வொரு முறையும் பயணத்தின் திசைகளில் மாற்றம் ஏற்படும்போதும் 5 ஜங்ஷன் இருக்கிறது. அதன் மூலம் பயண பாதைகள் திசைகளின் மாற்றத்தை தெரிந்து கொள்ள முடிந்தது. மலைகளிலும், கீழே ஓடும் நீர்வீழ்ச்சிகளையும் பார்த்துகொண்டே செல்லும் இந்த நீண்ட பயணம் சில நேரங்களில் நம்மை அறியாமல் ஒரு பயத்தையும் ஏற்படுத்துகிறது.  சர்ச், மசூதிகளும் ஹாங்காங்கில் உள்ளது. ஹிந்துகளுக்கென்று இஸ்கான் கோவிலும் உள்ளது.  வாடகை வீட்டையே கோவிலாக மாற்றி கிருஷணா உருவச்சிலைகளும், பிரபு பாத அவரின் உருவச்சிலையும், சீன பெண்களாலும், சீன ஆண்களாலும் தினபடி வழிபாடுகளும் ஆராதனைகளும் நடைபெறுகின்றது. சத்ய சாயியின் சென்டரும் பக்தர்களால நடத்தப்பட்டு வருகிறது. 




பத்தாயிரம் புத்தர்கள் மடாலயம் என்ற புத்த விகாரம் ஹாங்காங் சா டின் என்ற இடத்தில் இருக்கிறது. இந்த விகாரத்திற்கு செல்லும் இருபாதைகளிலும் பத்தாயிரத்திற்கும் அதிகமான பெளத்த பிக்குகளின் சிலைகள் இருக்கிறது. 1933 ஆம் ஆண்டில் சீன புத்த பிக்கு இங்கு வந்து இந்த மடாலயத்தை கட்டினார். புத்தரின் போதனைகளையும் மக்களுக்கு போதித்தார். 


புத்த பிக்குகள் இங்கே காவி உடைக்கு பதிலாக கருப்பு உடை அணிந்துள்ளனர். பிரதான பிக்கு மட்டுமே மஞ்சள் உடையும் அதற்கு மேல் சிகப்பு மேலாடை ஒன்றும் அணிந்துள்ளார். செருப்பு அணிவதற்கும் இங்கு தடைகள் இல்லை. புத்த விகாரையின் உள்ளே சுவர்களில் பதிக்கப்பட்ட தங்க நிறத்திலான சிறிய பெட்டிகள், புத்தர் சிலை ஆயிரக் கணக்கில் உள்ளன. அந்த பெட்டிகளுக்கு குறி இடப்பட்டிருக்கிறது. அந்த பெட்டிக்கு சொந்தக்காரர் அந்த பெட்டியின் உள்ளே தனது இறந்த உறவினர்களின் படங்களை வைத்து சாம்பலையும் பேணி வைக்கின்றனர். புத்தர் அவர்களுக்கு ஆசி வழங்குவதாக ஒரு நம்பிக்கை உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை சென்று அந்த சாம்பலுக்கு பூசைகள் செய்கின்றனர்  இறந்தவர்களின் சாம்பலை எடுத்து பூசை செய்து, படையல் இடுவதும் போன்ற பாரம்பரிய பழக்க வழக்கங்களை இந்த விகாரத்தில் செய்கின்றனர். சிங்மிங் .திருவிழாவின் போது இறந்தவர்களுக்கான வழிபாட்டு முறைகள் செய்து பழம், அவர்களுக்கு பிடித்தவைகளை செய்து படையலிட்டு வணங்குகிறார்கள். அப்படி செய்தால் இறந்தவர்களின் ஆசி நமக்கு கிடைக்கும் என்ற அசையாத நம்பிக்கை சீனர்களுக்கு உண்டு.

மக்காவ் (Macau)

மக்காவ் (Macau)

மக்காவ் சீன குடிஅரசின் சிறப்பு நிர்வாக பிரிவுகளில் இதுவும் ஒன்றாகும்.  போர்த்துகீசியர்கள் 16ம் நூற்றாண்டில் இங்கு குடியேறி வியாபாரம் மேற்கொண்டனர். முதலில் இந்த நகரத்திற்கு வந்த போர்ச்சுகீசியர்கள் அடிமைகளை வியாபாரத்திற்கு பயன்படுத்திக்கொண்டனர்.  இதை சீனர்கள் எதிர்த்தனர். சீனர்களுடன் உறவை வளர்ப்பதற்க்காக , வியாபாரத்தை இங்கு வளர்ப்பதற்க்கும் அடிமை முறையை ஒழித்து படிப்படியாக வியாபாரம் செய்ய ஆரம்பித்தனர். இரண்டாவது உலகப்போரின் போது சீனா ஜப்பானின் கீழே அதிகாரத்திற்குட்பட்டிருந்தாலும் மக்கா நகரம் மட்டும் ஜப்பானின் ஆதிக்கத்திற்கு உட்படவில்லை. ஒரு சுதந்திர நாடாகவே இருந்தது. இரண்டாவது உலகப்போருக்கு பின்னும் மக்கா போர்ச்சுகீசியர்களின் கையிலேயே இருந்தது. 50 வருடங்களுக்கு பின் 1999 சீனா வசம் வந்து சேர்ந்தது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படியில்  மக்காவிற்கு தன்னிச்சை அதிகாரம் வழங்கப்பட்டது. மக்காவில் சட்டம், நாணயம், வரி தன்னதிகாரத்திலும், எல்லை பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகளும் சீன அரசாங்கம் பொறுப்பேற்கிறது.

இந்த நகரத்தின் முக்கிய தொழில் சூதாட்டம் தான். இந்த விடுதிகளுக்குள் நுழைய 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். பாஸ் போர்ட் நுழைய முடியும் சரிபார்த்த பின் தான் உள்ளேயே விடுகின்றனர். மக்காவில் ஹாங்காங் டாலரையும், மக்காவ் டாலரையும், பயன் படுத்துகிறார்கள்.


ஒவ்வொரு ஓட்டலிலும் ஒரு கேஸினோ என்றழைக்கப்படும் சூதாட்ட விடுதி இருக்கிறது. எங்கெங்கும் கண்ணை பறிக்கும் விளக்குகள் சுற்றிலும் சீட்டு கட்டுக்கள், அவற்றில் பல்வேறு வகையான விளையாட்டுக்கள், போட்டி நிபந்தனைகள் என்று இருக்கிறது. இங்கு புகைப்படம் எடுக்க அனுமதியில்லை. எங்கு திரும்பினாலும் விளக்குகள், அலங்கர சூதாட்ட டேபிள்கள், சுற்றிலும் மக்கள் கூட்டம், என பார்த்தால் ஏதோ ஒரு உலகிற்கு வந்த உணர்வை ஏற்படுத்துகிறது. சுதாட்ட நகரங்களின் சொர்க்கம் என்று இந்த நகரம் அழைக்கப்படுகிறது. இந்த நகரத்தின் மொத்த வருமானமும் சூதாட்டம் மூலமே கிடைக்கிறது. இந்த ஹோட்டல்களே அடிதளத்தில் பேருந்துக்களையும் இயக்குவதால் யாரும் எந்த ஹோட்டலில் தங்கினாலும் எந்த பேருந்திலும் ஏறி நாம் செல்லும் இடங்களில் இறங்கி கொள்ளலாம். இதை தவிர மெட்ரோ வசதியும் உள்ளது.


சீனாவிடம் மக்காவ் வந்த பின் சீன அரசு மக்காவில் கவனம் செலுத்தி சுற்றுலாவளத்தை அதிகப்படுத்தியது. ஒரு குட்டி ஊராக இருந்தாலும் சீன அரசின் செயல்திட்டத்தினால் ஹாங்காங்கிற்கு அடுத்த இடத்தில் இது பார்வையாளர்களை கவர்ந்து இழுக்கிறது. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு இரண்டு கோடியை தாண்டிவிட்டது.

மக்காவிற்க்கும் ஹாங்காங்கிற்கும் இடையே சுற்றூலா பார்வையாளர்களை எண்ணிக்கை என்று கடும்போட்டி நிலவுகிறது. மக்காவின் அழகு முதலில் சிங், மிங் ராஜ்ஜியங்களில் கட்டிய பழைய கோவில்களும், பிறகு போர்ச்சுகீஸின் ஐரோப்பிய பாணியிலான கட்டிடக்கலைகளின் படைப்புகளும் கலந்து இருக்கிறது.

மக்காவின் இயற்க்கை அழகு இங்கிருக்கும் கடற்கறைகள், குட்டி குட்டி தீவுகள் சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றது. இங்கு நிலவும் தட்பவெட்ப நிலையும் ஆண்டு முழுவதும் ஒரே சீரான நிலையில்  (கடுமையான் வெப்பமும் இல்லாமல், குளிரும் இல்லாமல்) இருப்பதால் இன்னும் பயணிகள் இங்கு வருவதற்க்கு விருப்பம் தெரிவிக்கின்றனர்.



டான்சிங் பவுண்டன் (நீர்கண்காட்சி), மியூஸியம் ,ரூயின்ஸ் ஆப் செயிண்ட் பால் என்ற சர்ச் பாழடைந்த கோவில் அதை சரி செய்து அப்படியே காட்சிக்காக வைத்திருக்கிறார்கள். ஏராளமான கோவில்கள் இங்கு இருக்கின்றது.. கருணைக்கு, செல்வத்துக்கு, மழைக்கு, என்று ஒவ்வொரு தெய்வத்திற்க்கும் இங்கு கோவில்கள் உள்ளன.


வெனிஷியன் ஹோட்டலில் செயற்கையாக வெனிஸ் நகர தோற்றத்தில் படகு பயணமும் செல்லலாம். இந்த ஹோட்டலின் மேல் கூரையில் பார்த்தபோது  மேலே தெரிந்த வானத்தையும் நட்சத்திரத்தையும் பார்த்து நாங்கள் ஒரு திறந்த வெளி ஹோட்டல் என்று நினைத்தால் அப்புறம் தான் தெரிந்தது அது மேற்கூரையில் வானம் நட்சத்திரங்களின் அணிவகுப்பு கலைந்து செல்லும் மேகக்கூட்டம் இதை பார்த்தவுடன் நாங்கள் அடைந்த பிரமிப்புக்கு அளவே இல்லை.  இவ்வளவு தத்ரூபாமாக வரைந்திருக்கிறார்கள் எப்படி என்று கண்முன்னே இன்று வரை அந்த காட்சி தோன்றிக்கொண்டுதான் இருக்கிறது. அந்த கனாலில் படகு பயணம் செல்லலாம். அப்போது ஒரு இத்தாலியர் அந்த படகில் இத்தாலிய பாடல்கள் பாடிக்கொண்டே வருவார். அப்படியே வெனிஸ் தோற்றத்தை நம்கண்முன்னே நிறுத்துகிறது இந்த காட்சி.

Yonghegong Lama Temple யாங்கே சாங் பெய்ஜிங் லாமா கோவில்

Yonghegong Lama Temple
யாங்கே சாங் பெய்ஜிங் லாமா கோவில்


யாங்கே சாங் என்ற இடம் 1694 இளவரசன் யின் சென் என்பவரது வசிப்பிடமாக இருந்தது. அவர் பேரரசரானவுடன் அவர் பாரம்பரிய வழக்கப்படி அவர் தனது இருப்பிடத்தை தடைசெய்யப்பட்ட நகரத்திற்க்கு மாற்றினார். இந்த இடம் பிக்குக்கள் வசிக்கும் ஒரு இடமாகவும் வாழும் புத்தரை தேர்ந்தெடுக்கும் இடமாகவும் இதை பயன்படுத்தினர். பின்னர் சீனாவில் கலாச்சார புரட்சி வெடித்த போது இந்த இடம் 30 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது. பின்னர் சீன அரசு இதை திபெத்தியர் வணங்கும் கோவிலாகவும், சுற்றுலாதளமாகவும் உருவாக்கியது.



முதல் அறை திபத்திய பாணியில் மேற் கூரையில் மஞ்சள் நிற ஓடுகளை கொண்டு கட்டப்பட்ட இந்த கோவில் சொர்கத்திற்க்கான தூதுவர்கள்சிலைகளையும், பிரார்த்தனை மண்டபமும், ஊதிபத்தி கொளுத்துபதற்கான பாத்திரங்களும் இருக்கின்றன.

இரண்டாவது அறையில் 20 அடி உயரமுள்ள மஞ்சள் இனத்தவரின் திபெத் புத்தமதத்தை தோற்றுவித்தவரின் வெங்கல சிலையையும், ஓவியங்களையும் காணலாம்.


5 வது அறையில் மைத்திரேய புத்தரின் சந்தன மரத்தால் செய்த திருவுருவச்சிலை 60 அடி உயரத்தில் உள்ளது. இந்த சிலை 1910 ஆண்டிலேயே கின்னஸ் ரிக்கார்டில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

6/20/2013

என்னை கவர்ந்த டாக்டர் நண்பர்கள்


டாக்டர்ஸ் என்றால் எப்படி இருக்கனும்னா நாம் எதிர்பார்க்கிறது இரக்கம், அன்பு அந்த மாதிரி இருக்கிற டாக்டர் Dr. Rawlin Augustine, Nallini Arul, Gayathri Sreekanth இவங்க மூன்று பேருமே செம அன்பு, கனிவு இவங்ககிட்ட ரொம்பவே இருக்கும். அதே மாதிரி எனக்கு முதல் பிரசவம் பார்த்த கீதா அர்ஜீன் ரொம்ப அன்பு, எவ்வளவு முயற்ச்சி செய்தும் சிசேரியன் தான் அதனால எங்களைவிட அவங்களுக்கு தான் ரொம்ப அப்செட். ஏன்னா எங்க (அம்மா) மாமியாருக்கும் அவங்க மாமியார் கல்யாணி தான் பிரசவம் பார்த்தாங்களாம்.. சின்னது பெங்களுரில் கோமதி நாராயணன். ரொம்ப பிரசவம் காம்ளிகேட்லா ஆனதுல 8 மாதம் பிறந்தஉடனேயே ஆபரேஷன் பண்ணி குழந்தையை எடுத்துட்டாங்க. ஆனால் அவங்க கிட்ட அப்படி ஒரு பயம் எனக்கு. என்ன சாப்பிடியா, மருந்து சாப்பிட்டியா என்ற மிரட்டலே இருக்கும். அவங்களை பாக்கும்போது எனக்கு நான் குன்னூரில் இருந்த விக்டர் என்ற டாகடர் ஞாபகம் தான் வரும். எனக்கு வீஸிங் வரும்பொது என்னை  அப்பா தோளில் போட்டு அவர்கிட்ட அழைத்துகொண்டு போவார். டாக்டர் ஊசியை கையில் எடுத்த உடனேயே நான் ஓடிவிடுவேன். பெரும்பாலும் எதிர்தாப்புல வர்ரவங்க தான் பிடித்து குடுப்பார். உடனே என்ன ஊசி தான். அதே இன்று வரை எனக்கு அந்த பயம் பொகவில்லை. என் பையனோ அதுக்கும் மேல பெரியவன் ஊசி குத்துவதைபார்த்துகொண்டே இருப்பான். சின்னது என்னை விட டாக்டரை ஒரே தள்ளு தள்ளி ஓடிவிடுவான். பெங்களுரில் டாக்டர் பெனகப்பா தான் எங்க குடும்ப டாக்டர். இத்தனைக்கும் பெனகப்பா ஊசியே போடமாட்டார். தடுப்பு ஊசி போடும்போது இவ்வளவு ஆர்பாட்டமும் நடக்கும். . அவர் சொல்லிவிடுவார் சுபா நீ நவீன் பெனகப்பா (பையன்) அவரும் டாக்டர் தான் இருக்கும்போது வாம்மா. என்னால் தனிய இவனை பிடிக்க முடியலை என்பார். பசங்களை கூட்டி போயே நானும் நவீனும் செம தோஸ்தாகிட்டோம். பசங்களுக்கு உடம்பு முடியலைனா சில நேரங்களில் ஜீரம் ரொம்ப அதிகமாகி அட்மிட் பண்ணற வரை போய்டும். அந்த சந்தர்பத்தில் சி.பி. எப்போவுமே வெளிநாட்டில் இருப்பார். உடனே நவீனுக்கு போன் செய்து அவரை ராத்திரி 2 மணி கூட இருக்கும். பெங்களுர் ஆஸ்பத்திரி ஆரம்பித்தவர் அவர், நீ வந்துடு நான் வந்துடறேன் உடனே அட்மிட் பண்ணிடலாம் என்பார். அந்த மாதிரி தோள்குடுத்த நண்பர் அவர்தான். இன்றும் இப்போ நிமான்ஸ் ல, சாகர் ல child specialist ஆக இருக்கார். அவர்கிட்ட இப்போவும் உன்னை மாதிரியே அன்பா, கனிவா பேசரவங்களை ரெபர் பண்ணு. என்று கேட்பேன். அப்படிதான் ரவிபிரகாஷ் என்ற கண்டாக்டரும், ருத்ரபிரசாத் என்ற ஆர்த்தோ டாக்டரும் நண்பர்களானார். இவர்களுக்கெல்லாம் பணம் முக்கியமில்லாமல் சேவையாகத்தான் இன்று வரை இருக்கிறார்கள். இன்றும் இவர்கள் மாறவில்லை.  நான் இங்கே இருக்கும்போதே போனில் மட்டும் தான் சொன்னோம் டாக்டர் ரவி கிட்ட, அப்பாக்கு அவரே ஆபரேஷன் பண்ணி அப்படி கவனிச்சுகிட்டார். இப்போ கூட சந்தேகம் நா உடனே ருத்ரபிரசாத்கிட்ட தான் போன் செய்து கேட்கிறது.அதே மாதிரி இங்கு டாக்டர் பீட்டர் கீரீப்பர் எனக்கு நண்பரானார். அவரிடம் தான் நான் செல்வது. இன்னிக்கு விட்டமின் டி குறைபாடால் ஊசி போடனும் என்றார். அவரிடம் டாக்டர் ஊசி வலிக்குமா, எனக்கு மட்டும் ஏன் இதெல்லாம் வருது என்றால் என்று ஒரு பத்துதரம் கேட்டிருப்பேன், சிரித்துகொண்டே மிகவும் பொருமையாக விளக்கிகொண்டிருப்பார். இங்கே வெயிலே இல்லை மா, அதான் இப்படி, ஊசி வலிக்காது என்று குழந்தைக்கு சொல்ற மாதிரி சொல்லிக்கொண்டிருந்தார்.  இன்னிக்கு அவருக்கு வெய்ட் பண்ணின போது இவங்க ஞாபகம் எல்லாம் வந்துச்சு. அனால் இன்னும் ஊசி பயம் மட்டும் போகவில்லை என்னை விட்டு. 

5/23/2013

எனது முதல் தாய்ச்சி வகுப்பு..


சில மறைக்க வேண்டும் என்று நினைக்கும் விஷயங்கள் பகிங்கரப்படுவது போல நேற்று ஒரு சம்பவம். இங்கு இருக்கும் நண்பர்கள் எப்போதும் 15 நாள்களுக்கொரு முறை வீட்டிற்கு வந்து சாப்பிட்டு, கும்மாளமிட்டு தான் திரும்புவார்கள். இந்த தடவை எல்லோரும் ஊருக்கு செல்ல இருப்பதால் அவசரமாக பைனல் பிராஜக்ட் வேலையில்  எல்லோரும் பிஸி. ஒருநாள் தாய்ச்சி பற்றிய பேச்சு வந்தது. தாய்ச்சி இங்கே சீனாவில் யோககலை மாதிரி .அதை நான் கத்துக்கலாம் என்று இருக்கேன் என்றதற்கு இது வயசானவங்க ரோட்டுல கை காலை ஆட்டி ஆட்டி பண்ணறது இது ஒரு உடற்பயிற்சி மாதிரி அதை போய் கத்துக்கபோறியா, அதுவும் நீயே நிறையா யோகா வகுப்பு எல்லாம் சென்றிருக்கிறாய்  என்று உடனே இங்கிருக்கும் குட்டிசாத்தான்கள் முற்றுபுள்ளி வைத்துவிட்டார்கள்.  எனக்கு எப்போவுமே வகுப்புக்களுக்கு செல்வதென்றால் ரொம்ப ஆர்வம். அதுவும் யோகா, தியான வகுப்புக்கள் என்றால் நானும், சி.பி. யும் இந்தியாவில் இருக்கும்போது எல்லா வகுப்புக்களுக்கும் சென்று விடுவோம். நீண்ட நாள்களுக்கு பின் என் சீன தோழி சுபா இந்த புதன்கிழமை ஒரு நாள் மட்டும் தாய்ச்சி வகுப்பு கலந்துக்கோ உனக்கு பிடிக்கலைனா அடுத்த வாரத்திலேருந்து வரவேண்டாம் நானும் உன்னை கட்டாயபடுத்த மாட்டேன் என்றாள் சரி போய்தான் பார்ப்போமே என்றூ நேற்று கிளம்பினேன்.இதுங்ககிட்ட ஒண்ணும் சொல்லலை. ஏன்னா ஒருநாளுக்கு எப்படி இருக்கு நு பார்த்துட்டு வந்துடுவோம் என்று சொல்லாமல் சென்றேன்.  இங்கே இருக்கும் ஆராய்ச்சி மாணவர்கள் எப்போதும் ஆராய்ச்சி கூடத்திற்கு சென்று விட்டால் போன் செய்யமாட்டார்கள். எதாக இருந்தாலும் மெசேஜ் தான் முகநூலில். அதனால் யாரும் நமக்கு கால் பண்ண மாட்டார்கள் என்று கிளம்பிவிட்டேன். அப்போது இந்த பக்கிங்கள்ள ஒன்னு என்னை கால் பண்ணியிருக்கு. உடனே என் பையன் அம்மா தாய்ச்சீ கிளாஸ் போய் இருக்கா என்றதும் உடனே எல்லா பக்கிங்களுக்கும் போட்டு குடுத்தாச்சு முதல் பக்கி. நான் வரும்வரை காத்துகொண்டிருந்துவிட்டு எல்லாத்துக்கும் விஷயம் பரவி சுபா தாய்ச்சி வகுப்பு எப்படி இருந்தது என்று ஒரே காலாய்பு. ஆனால் போனவுடன் தான் தெரிந்தது எதையுமே ஆராயமல் சொல்ல கூடாது நு, காலுடன் கையும் சேர்ந்து 4 திசைகளிலும் சுற்றி கையும், காலும் உடம்பின் எல்லா பாகங்களுக்குமான பயிற்சி. இதை இதுங்க கிட்ட சொன்னா நம்ப மாட்டேங்குதுங்க. 

5/22/2013

ஷின் நியான் குவாய்ல! சீன புத்தாண்டு.!

ஷின் நியான் குவாய்ல!  சீன புத்தாண்டு..

 சுபஸ்ரீ மோகன்

சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்... அது, வசந்த காலம். ஆனால், சீன மக்களுக்கோ கசந்த காலம். 'நியான்' என்ற ஒரு காட்டு விலங்கு சீனாவில் ஒரு கிராமத்தின் மக்களை தினமும் இரவு நேரத்தில் தாக்கியது என்பது பழைய மரபுக்கதை. ஆடு, மாடு போன்ற விலங்குகள் மற்றும் தானியங்களையும் தின்று தீர்த்த அந்த விலங்கு, சின்னஞ்சிறு குழந்தைகளையும் விட்டுவைக்கவில்லை. அந்த ஊர் மக்கள், இரவு என்றாலே பயம் கொள்ள ஆரம்பித்தனர்.

இந்தக் கொடுமையில் இருந்து தப்ப, ஒரு வாய்ப்பை தேடிக்கொண்டு இருந்தனர். ஒரு நாள், சிறு குழந்தை அணிந்திருந்த சிவப்பு உடையையும், எங்கோ எரிந்துகொண்டிருந்த நெருப்பையும் கண்டு, நியான் பயந்து ஓடியதை மக்கள் பார்த்தனர்.

நியானின் கொடுமைகளில் இருந்து தப்ப, சிவப்பு நிற உடைகளையும், நெருப்பையும் காட்டி அதை விரட்டினர்!

பின்னர், ஒவ்வொரு ஆண்டின் வசந்த கால தொடக்கத்திலும், சீன மக்கள் தங்கள் வீடுகளின் முன், சிவப்பு நிற கூண்டு விளக்குகளை வைத்து, சிவப்பு உடைகளையும் அணிய தொடங்கினர்.


இந்த கலாசாரம் தான், இன்றும் வசந்த கால பண்டிகையாகவும், வருட பிறப்பாகவும், கொண்டாடப்படுகிறது!

சீன புத்தாண்டு... ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு விலங்கின் பெயரால் அழைக்கப்படுகிறது. இப்படி 12 விலங்குகளின் பெயரில் ஆண்டுகள் உள்ளன. இந்த ஆண்டின் பெயர் 'டிராகன்'.

சீன வருட பிறப்பை, இந்த ஆண்டு இன்று (ஜனவரி 23) தொடங்கி ஜனவரி 25 வரை கோலாகலமாக கொண்டாடுகிறார்கள்.

நாடே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. வீதி எங்கும் சிவப்பு வண்ண கூண்டு விளக்குகளின் அணிவரிசை, தோரணங்களின் அலங்காரம்!

சிவப்பு மலர்களையும், சிவப்பு வண்ணங்களில் நல்லதைக் குறிக்கும் வாசகங்களையும் கொண்டு, வீடு, தெரு, மற்றும் கடைகளை அலங்கரித்துள்ளனர்.

சிவப்பு வண்ணம் நெருப்பை குறிக்கும். ஆதலால், குழந்தைகளுக்கு பரிசுகள் கூட சிவப்பு நிற உறையில் வைத்து கொடுக்கப்படுகிறது. இந்த விழாவில், பாரம்பரிய நடனமான டிராகன் நடனம் மற்றும் வண்ண வானவெடி வேடிக்கையும் முக்கிய நிகழ்வுகளாகும்.

இந்தப் பண்டிகையின் சிறப்பு அம்சம் என்னவென்றால், அமெரிக்காவில் கொண்டாடப்படும் நன்றி நவிலும் நாள், தமிழகத்தின் காணும் பொங்கல் பண்டிகையைப் போல இது குடும்பங்கள் ஒன்று சேரும் திருநாள் என்பதே.

வருடம் முழுதும் எங்கெங்கோ இருந்தாலும், சீன வருடப் பிறப்பின்போது குடும்பங்கள் ஒன்று சேர்ந்து விருந்துண்டு மகிழ்வது வழக்கம். இந்தத் திருநாளன்று எட்டு அல்லது ஒன்பது உணவு வகைகள் தயாரிக்கப்படுகிறது. எட்டு என்ற எண் - செல்வ செழிப்பையும், ஒன்பது என்ற எண் - நீண்ட ஆயுளையும் குறிக்கிறது.

நகரத்தில் வேலை பார்க்கும் மக்கள், சீன புத்தாண்டின்போது தம் சொந்த ஊருக்கு சென்றுவிடுவதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இந்த சமயத்தில் வர்த்தகம் மற்றும் வணிக பரிமாற்றமும் பாதிக்கபடுகிறது.

இந்த விழா நேரத்தில், இந்தியாவின் தீபாவளியைப் போல், நாடே ஸ்தம்பித்து போகிறது. அரசாங்கமும் தனது விடுமுறை நாட்களை இந்த விழாவுக்கு ஏற்றார்போல் அறிவிக்கிறது.

சீனா மிக அதிகமாக ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்வதால், மற்ற நாடுகள் இதற்கேற்றார்போல் தம் வர்தக பரிமாற்றங்களை அனுசரித்துகொள்கின்றன.

இன்று உலகளவில் நாம் பிரமிக்கும் நாடுகளில் சீனாவும் ஒன்றாக உள்ளது. இந்நாட்டு மக்களின் உழைப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் கலாசார ஒற்றுமைதான் நம் பிரமிப்புக்கு காரணம். சீனப் புத்தாண்டு, இந்த பழமையையும் கலாசார ஒற்றுமையையும் பிரதிபலிக்கிறது.

அனைவருக்கும் ஷின் நியான் குவாய்ல... அதாவது, சீனப் புத்தாண்டு வாழ்த்துகள்!



Posted Date : 17:01 (23/01/2012)Last updated : 15:01 (24/01/2012)

5/15/2013

கோடைகால அரண்மனை.






கோடைகால அரண்மனை.


இந்தஅரண்மனை 1750 இல்சியான்லாங்என்றஅரசரால்கட்டப்பட்டது. பல்வேறுபோர்களினால்சிதைந்தஇந்தமாளிகைபின்னர் 1873ம் ஆண்டுமீண்டும் புதுமைபடுத்தப்பட்டது. பேரரசி சிஷியின் 40வது பிறந்த நாளுக்கான பரிசாக, பேரரசர் குவாங்ஷீ வழங்கியதுதான் ஈ ஹ யுவான் மாளிகை.ஓருபூங்காவாகஇருந்தஇந்தஇடத்தைபேரரசிக்குபரிசளிக்க எண்ணி அதை சிறப்பாக வடிவமைத்தார் பேரரசர்குவாங்ஷீ. சிங்யீபூங்காவாகஇருந்தஇந்த இடமே பின்னர் கோடைக்கால மாளிகையாகமாற்றப்பட்டது.

பெய்ஜிங்கின்மத்தியபகுதியில்இருந்துஒரு 12 கிலோமீட்டர்தொலைவில்வடக்குதிசையில்உள்ளதுஇந்தபூங்கா. ஏரிமற்றும்பூங்காகளினால்சூழப்பட்டிருக்கிறதுஇந்தமாளிகை..இதைசுற்றிகுன்மின்ஏரியும்பலயுகங்களைகடந்தஇந்தமலையும்இருக்கிறது. முதலில்இதைசின்யியுவான்என்றுஅழைத்தார்கள். தெளிவானநீரலைகளின்பூங்காஎன்றும்அழைத்தார்கள். 19 நூற்றாண்டில்இதுகோடைகாலஅரண்மனைஎன்றுபெயர்சூட்டப்பட்டுள்ளது.

கோடைக்கால மாளிகையினுள்ளேஇருக்கும் குன்மிங் ஏரி, பீச் பழத்தின் வடிவத்தில்இருக்கிறது. மாளிகையின்மத்திய பாகத்தில் காணப்படும் 41 மீட்டர் உயர கோபுரம், புத்த ஊதுவத்திகோபுரம் என்று அழைக்கப்படுகிறது. இந்தகோபுரத்தின்பக்கசுவர்கள்வவ்வாலின்இறக்கைகளை போன்ற அமைப்புடன் காட்சியளிக்கிறது. பீச் சீனாவில் நீண்ட வாழ்வினை குறிக்கும் அடையாள சின்னமாகவும், வவ்வால்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையின் சின்னமாகவும் கருதப்படுகின்றன.
பேரரசி சிஷுவைமகிழ்ச்சிப்படுத்த, ஃபூ எனப்படும் மகிழ்ச்சி, லூஎனப்படும் செல்வம், ஷோ எனபது நீண்ட வாழ்க்கையையும் குறிக்குமாறு  இந்த பூங்கா அமைக்கபட்டிருக்கிறது. நெடிய வாழ்க்கை மலை எனப்படும் வான்ஷோ மலையின் அடிவாரத்தில் ஒரு ஏரியைகட்ட செய்தார்குவாங் ஷீ. இந்தமலையின்மேலிருந்துகுன்மிங்க்ஏரியைபார்த்தால்பீச் போலத் தெரியும். அந்தஏரியில் 17 வளைவுகள் கொண்ட ஒரு பாலத்தை காணலாம்.இந்த பாலத்தில் 540 சிங்கங்கள் சித்திரங்களாக செதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிங்கமும் வெவ்வேறு தோரணையில் உள்ளது. இந்த பாலத்துக்கு அருகேஆமை வடிவத்தில் குட்டி குட்டி தீவுகளை உருவாக்கினார் .. இந்த ஆமைகளும்நீண்ட வாழ்க்கை சின்னங்களாக கருதப்பட்டவையே.

ஏரியின் ஒரு கரையில் பிரம்மாண்டமான வெள்ளைப்பளிங்கு ஓடம்அலங்காரத்துடன்கம்பீரமாகநிற்கிறது. சீனத்துஅரசிகள்அங்கே உட்கார்ந்து டீ குடித்தபடிஇந்தஇயற்கைகாட்சியைரசித்தபடிஅமர்ந்திருப்பார்கள். சிலசமயங்களில்அவர்கள்ரசிக்கபடகுகளில்வீரதீரவிளையாட்டுகள்நடைபெறும்.ஏரிகளில்தண்ணீரில்ஏராளமானதாமரைமலர்கள்மலர்ந்திருக்கும்ரம்மியமானகாட்சிமனதைகொள்ளைகொள்கிறது..
இக்கோடைகால அரண்மனையின் எதிரில் குன்மிங் ஏரியும் உள்ளது.அதன் பக்கத்தில் 195 அடி உயரமுள்ல நீண்ட வாழ்நாள் குன்றில் மூன்று அடுக்கு மாளிகை உள்ளது.70,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள அரண்மனை வளாகத்தில் அழகிய கட்டிடங்கள், பூங்காக்கள், மற்றும் கலை மண்டபம் இருக்கிறது.இந்த ஏரி முற்றிலும் செயற்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதில் இருந்த மண்ணை குன்றாக குவித்து அதன் மேல் இந்த அரண்மனையை கட்டியுள்ளார்கள்.கோடை அரண்மனை பூங்காக்களும் ஏரியும் சூழ்ந்த ரம்மியமான இடத்தில் சூரிய ஒளியில் மலர்களின் நறுமணத்தில் மாலை வேலைகளில் பேரரசர்கள் உலா போகும் இடமாகவும் இருந்தது.தோட்டகலை நிபுணர்கள் அழகிய நடைபாதை அமைத்து வண்ன வண்ண தாவரங்கள் பூக்களை பதியமிட்டனர்.  பாக்ஸ்ர் கலகத்தின்போது இந்த குன்றின் மேல் இருந்த அரண்மனையை பிரான்சும், இங்கிலாந்தும் தாக்கியது.1886-1902 ஆம் ஆண்டுகளில் மீண்டும் இந்த பூங்கா புதுப்பிக்கப்பட்டது.

கோடைபூங்காவின்அழகேஅதைசுற்றியிருக்கும்இயற்கைவளங்களானஏரி, மலைமற்றும்பூங்கா தான். கோடைகாலமாளிகையை 4 பாகங்களாகபிரிக்கலாம். தர்பார்பகுதி, முன்மலைபகுதி, பின்மலைபகுதிமற்றும்ஏரிபகுதி.தர்பார்பகுதிஇந்தஅமைப்பின்வடகிழக்குதிசையில்உள்ளது. அரண்மனைவாயில்கிழக்குவாயிலில்லிருந்துகுன்மின்ஏரியின்வடகிழக்குகரைவரைஅமைந்துள்ளது.  இங்கேதான்குவான்சூசக்ரவர்த்தி, அவரின்ராணி, அரசுஅலுவலர்கள்எல்லோரும்அரசவிவாதங்கள், சிலமுக்கியநிகழ்வுகளில்கலந்துகொண்டனர்.அரண்மனையில்வேலைசெய்பவர்களும்இங்கேதான்வசித்தனர். அவர்களுக்கென்றுதனிஇடம்இருந்தது. .
உலகத்தின் சிறந்த பூங்காக்களில் ஒன்றான கோடைக்கால மாளிகை சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கிறது.
நீண்ட வாழ்நாள் குன்றின் மேல் டோபோ கிளேஸ்டு பகோடா என்ற புத்தர் கோயில் உள்ளது.1998 டிசம்பர் யுனெஸ்கோ இந்த கோடைகால மாளிகையை உலக பழக்கால மாளிகை என்று அறிவித்தது.

4/29/2013

ஷாங்காய்

பெய்ஜிங்லிருந்து ஷாங்ஹாய் புல்லட் டிரெயினில் மணிக்கு 320 கிலோமீட்டரில் வேகத்தில் 5 மணிநேர பயணம்… சீனாவின் புகழ் வாய்ந்த முக்கிய நகரங்களில் ஷாங்காயும் ஒன்று. சீனாவின் வணிக தலைநகரம் என்று கூட கூறலாம். முதல் முறை செல்வதால் எங்களுக்குள் ஒரு ஆவல் மற்றும் பதட்டமும் கூட. புல்லட் டிரெயின் பயணம் மிக அருமையாக இருந்த்து. அவ்வளவு வேகமாக செல்கிறது என்று டிரெயினில் இறுக்கும் டிஜிடல் போர்ட் பார்த்து தான் தெரிந்துக்கொண்டோம். கோப்பை நிறய காபி அல்லது டீ இருந்தாலும் ஒரு துளி கூட சிந்தவில்லை. இன்னொரு முக்கிமான சௌகர்யம் என்னவென்றால் இந்த அதிவேக ரயில் வண்டியில் மொபைல் ஃபோன் உபயோகிக்கலாம். விமானத்தில் தான் ஃபோனை ச்விட்ச் ஆஃப் செய்ய வேண்டும். ஒரு சிறு களைப்பும் இல்லாமல் ஷாங்ஹாய் வந்து சேர்ந்தோம்.
பொதுவாக ரயில் நிலயங்கள் போல் இருக்கும் என்று இறங்கிய எங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. இது என்ன ரயில் நிலயமா அல்லது தவறிபோய் விமான நிலையம் வந்து விட்டோமா என்று எண்ண தோன்றியது. அவ்வளவு சுத்தம் மற்றும் நவீனமாக இருந்தது. டாக்சியை பிடித்து ஹோட்டல் வந்து சேர்ந்தோம். முன்னேற்பாடாக ஹோட்டலின் விலாசத்தை சீன மொழியில் செல் ஃபோனில் பதிவு செய்து வைத்திருந்தோம். நாங்கள் ஷாங்ஹாய் வந்தது மாலை நேரம். மாலை மற்றும் இரவு ஷாங்ஹாய் கொள்ளை அழகு. ஒரு நல்ல 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கினோம். ஷாங்ஹாயில் என்ன பார்பது என்று ஒரு சின்ன பட்டியல் போட்டிருந்தோம்; கிட்டதட்ட இதில் உள்ள எல்லா இடங்களையும் பார்க்க துவங்கினோம். முதலில் ஷாங்காய் மியூசியம். அங்கிருந்து நாங்கள் சென்ற இடம் ஓரியண்டல் பியர்ள் டவர் என்கிற ஆயிரத்தி ஐந்நூற்றி முப்பத்தைந்து அடி உயரமுள்ள கோபுரம். இந்த கட்டிடம் ஹாங்ஃபூ நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்தக் கட்டிடம் 1991ம் ஆண்டு கட்டத் துவங்கி 1995ல் முடிக்கப்பட்டபோது ஆசியாவிலேயே முதல் பெரிய கோபுரமாகவும், உலகில் மூன்றாவது இடத்திலும் இருந்தது. கண்ணாடித் தரையுடன் கூடிய அறையிலிருந்து நிலப்பகுதியை பார்க்கும்பொழுது ஆஹா என்ன ஒரு அழகு என்று பாராட்டாமல் இருக்க முடியவில்லை.. கீழ்த்தளம் 863 அடி உயரத்திலும், மிக உயர்ந்த தளம் 1148 அடி உயரத்திலும் இருக்கிறது.

ஷாங்காய் வேர்ல்ட் பைனான்சியல் சென்டர் என்கிற கட்டிடமும் 1614அடி உயரம். இந்தக் கட்டிடம் 1997ல் கட்டத்துவங்கி 2008ல் முடிக்கப்பட்டது. உலகின் மூன்றாவது உயரமான கட்டிடமாக இருக்கிறது.
நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான நான்ஜிங் ரோடு ஐந்து முதல் ஆறு கிலோமீட்டர் நீளமுடையது. வாணிக தளமான கிழக்கு நான்ஜிங் ரோடு ஹாங்ஃபூ மாவட்டத்திலும், ஐரோப்பிய நாகரீகம் நிரம்பிய மேற்கு நான்ஜிங் ரோடு ஜிங்யான் மாவட்டத்திலும் இருக்கிறது. அடுக்கு மாடி வணிக வளாகத்தில். வீட்டு உபயோகப்பொருட்கள், தொலைதொடர்பு சாதனங்கள், புகைப்படக் கருவிகள், உடற்பயிற்சி சாதனங்கள், உடைகள், அலங்காரப் பொருட்கள் நகைகள், கடிகாரங்கள், கண்ணாடிகள், புத்தகம் அழகு சாதன பொருள்கள், , குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டுப்பொருள்கள், சீனகுடைகள், எல்லாமே இந்த வணிக வளாகத்துக்குள் கிடைக்கிறது. சீனத்து பட்டு, சீன பாரம்பரிய உடைகள் என அப்போது திருவிழா கூட்டம் கூட்டம் மாதிரி ஜே ஜேனு இருக்கிறது. புண்ட். ஷங்காய் நகரின் மையத்தில் ஓடுகிற நதிகரையை ஒரு சமதளமாக மாற்றி அதன்மேல் கடைகள், பூங்காக்கள், அமைத்து அலங்கரமாக காட்சியளிக்கிறது. நான்ஜிங் வீதியும், பண்டு தெருவும் சேருமிடத்தில் ஷாங்காயின் முதல் கம்யூனிஸ்டு மேயரின் வெண்கலசிலை உள்ளது. வானாளாவிய கட்டிடங்கள் சுற்றிலும் வான் தழுவிய கட்டிடங்கள், இரவு நேர விளக்குகளின் ஒளியில் ஒரு சொர்க்கலோகமாக காட்சியளிக்கிறது.
ஷாங்காயின் கிழக்கில் ஜேடுபுத்தர் கோவில் உள்ளது. புத்தரின் சிலைகள் அமர்ந்த நிலையிலும், வலது கையில் தன் தலையை தாங்கிபிடித்தபடி ஒருகளித்த நிலையில் இருக்கும் புத்தர் தன் சாந்தத்தாலும்,எல்லோர் மனங்களையும் வசிகரிக்கிறார். மலைமுகடுகளிலும், இங்கு ஏராளமான புத்தர் கோவில்கள் காணப்படுகிறது. கிழக்கு நாடுகளின் முத்துகோபுரம் புதாங் என்ற பூங்காவில் இருக்கிறது. 1536 அடி உயர இந்த கோபுரம் உலகின் மூன்றாவது உயர கோபுரமாகும். இந்த கோபுரத்தை பார்வையிட வசதியாக எலிவேட்டர் வசதியிருக்கிறது. இங்கு சென்று ஷாங்காயின் முழு அழகையும் கண்டு களிக்கலாம்.

லாங்மென் கேவ்

மத்திய சீனாவின் ஹெனான் மாநிலத்தைச் சேர்ந்த புராதன நகரான லெவுயாங் நகரில் அமைந்துள்ள லாங்மன் கற்குகை சுமார் 1500 ஆண்டு கால வரலாறுடையது. லாங்மன் கற்குகை, லுயாங் புறநகரின் தெற்கிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் நேரெதிர் நிலையில் மலைகள் உள்ளன. நடுவில் ஈவு ஆறு ஓடுகின்றது.
எழில் மிக்க இயற்கைக் காட்சித் தலமான இவ்விடம் மக்களுக்கு ஏற்ற பருவ நிலை கொண்டது. கிழக்கு மற்றும் மேற்கு மலைகளின் சுமார் ஒரு கிலோமீட்டர் நீளமுடைய கற்பாறையில் 2300க்கும் அதிகமான கற்குகைகள் செதுக்கப்பட்டுள்ளன. இக்கற்குகைகளுக்குள் 10 ஆயிரத்துக்கும் அதிகமான புத்தர் உருவச்சிலைகளைப் பண்டை காலச் சீனர்கள் செதுக்கினர். கி.பி.500ஆம் ஆண்டு காலப் பகுதியில், சீனாவின் பெய்வெய் வம்சக் காலத்து பேரரசர் புத்த மத நம்பிக்கையுடையவர். எவ்வளவு புத்தர் உருவச்சிலைகளைச் செதுக்கப்படுகிறதோ அவ்வளவுக்கு புத்தரின் அருள் ஆசி கிடைக்கும் என்று நம்பினார்.

இதனால், அதிகமான புத்தர் சிலைகளைச் செதுக்க வேண்டும் அதனால் புத்தரின் ஆசி கிடைக்கும் என்று பெய்வெய் வம்ச காலப் பேரரசர் முடிவு செய்தார். லாங்மன் என்னும் இடத்தில் கற்பாறை தரமானதாகவும் சிலைகள் செதுக்க உகந்ததாகவும் இருந்ததால் 400க்கும் அதிகமான ஆண்டுகள் கால உழைப்பு மூலம் லாங்மன் குகைகளில் புத்த உருவங்கள் செதுக்கப்பட்டன. இக்கற்குகையிலுள்ள 90 விழுக்காட்டுக்கு மேலான சிறிய குகைகள் கி.பி.493 A.D. நூற்றாண்டு முதல் 400 ஆண்டுகளாக பெய்வெய் வம்சக் காலத்திலும் தொடர்ந்து தாங் வம்சக் காலத்திலும் செதுக்கப்பட்டன. இங்கு குகைகளுக்கு நடுவில் இருக்கும் சாக்கியமுனி புத்தாவும் அருகில் போதிசத்துவர்களின் சிலைகளும் இருக்கிறது. மேல்புர கூரை தாமரை வடிவங்களில் அமைக்கப்பட்டிருக்கிறது. ஐந்து பெரிய புத்தரின் சிலைகளும், பக்கத்தில் போதிசத்துவரின் சிலைகளும், இருக்கிறது. வடக்குவெய் வம்ச காலத்தைப் பிரதிபலிக்கும் மற்றொரு கற்குகை இதுவாகும். இக்குகையில் புத்தர் உருவச்சிலைகள் பல உள்ளன. புத்தர் உருவச்சிலைக்கு முன் இவற்றைச் செதுக்கியவர்களின் பெயர், செதுக்கிய நாள், காரணம் ஆகியவை இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. வடக்குவெய் வம்ச காலத்தில் நேர்த்தியான கையெழுத்துக்கள் மற்றும் சிறபக்கலையை ஆராய்வதற்கு இந்த தகவல்கள் உபயோகமாக உள்ளன.

லாங்மன் கற்குகையில் ஏராளமான மதம், நுண்கலை, ஓவியம், நேர்த்தியான கையெழுத்துக்கள், இசை, உடுப்பு, நகை, மருத்துவம், மருந்து, கட்டடம், சீன மற்றும் வெளி நாட்டுப் போக்குவரத்து ஆகியவை பற்றிய வரலாற்று தகவல்களும் உள்ளன. இதனால், இது, பெரிய ரக மலை பாறைகளை குடைந்து கட்டப்பட்ட குகை கோவிலாகவும், அருங்காட்சியகமாகவும் திகழ்கிறது. உலகப் பண்பாட்டு மரபுச்செல்வத்தைத் தேர்ந்தெடுக்கும் வரைமுறைப் படி லாங்மன் கற்குகை 2000ஆம் ஆண்டு நவம்பர் 30ந் நாள் உலக மரபுச்செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
லாங்மன் வட்டாரத்திலுள்ள கல்குகைகளும் புத்தர் உருவச்சிலைகளும் சீனாவின் வடக்குவெய் வமிச காலத்தின் பிற்காலத்திலும் தாங் வமிச காலத்திலும் (கி.பி.493-907) மிக பெரிய அளவிலான கலை வடிவத்தைப் பிரதிபலித்துள்ளன. இந்த கலைப் படைப்புகள் சீனாவின் கல் செதுக்கும் கலையின் உயர்ந்த நிலையைச் சித்திரிக்கின்றன என்று உலக மரபுச்செல்வ ஆணையம் மதிப்பீடு செய்துள்ளது.