Read more: http://www.techtrickhome.com/2013/01/prevent-duplicationdisable-copy-paste.html#ixzz2XgIBls2n

3/13/2013

மெளனம்...


என்றாவது பார்க்கவிருக்கும்
சில மணிதுளிகளுக்கான எதிர்பார்ப்பில
கிளர்ந்துகொண்டிருக்கும் மனதை
நேரங்களை மரணித்தே கடக்கவேண்டிய
சில பொழுதுகள்
உன்னுடன் பேசவேண்டியதை
பேச எழாமல் போகும் நாளில்
மனதினில் ஒத்திகையிட்டு 
வார்த்தைகளை தேடிபிடித்து கோர்த்து
கொண்டிருக்க உடைந்துவிழும் வார்த்தைகளை
மெளனம் கொண்டு தடுக்க வெளிவராமல்
விழுங்கிய வார்த்தைகள் ஓர் ஆயிரம்

தோழி


என்னுயிர் தோழி எங்கே தொலைத்தாய் உன்னை
நித்தம் நித்தம் பல கதைகள்
கூடி கும்மாளமிட்டு வகைவகையாய்
பேச்சுக்கள் பேசி நக்கலும் நையாண்டியும்
நாவினில் நாட்டியமிட்ட நாட்கள் நினைவினில் வர
நீ மட்டும் இப்போது பேசா மடந்தையென
சிலையாகி போனாயே,  
ஏதோ நடந்திடுச்சோ பதருகிற மனசை
கடிவாளமிட்டு அடக்கிவிட என்ன வழி
தெரியலையே தேற்ற வகை அறியலையே !!

3/10/2013

மகளிர் தினம்






மகளிர் தினம் மகளிர் தினம் என்று
நாளிதழ்களில் விளம்பரம் இரண்டு நாட்களாகவே
சில இடங்களில் மகளிர் கருத்தரங்கங்கள்
பக்கம் பக்கமாக நடந்துகொண்டிருக்க
வசதியானவர்களை பேட்டி எடுக்க தொலைகாட்சி

போட்டியிட ,நாளிதழ்களும் முன்வழியை தொடர
நடுத்தரவர்கத்து கீதா மட்டும் காலையில் அவசரமாக
குடும்பத்திற்கான சமையலை செய்துவிட்டு அலுவலகத்திற்கு கிளம்ப
இரவு நேரத்திற்கு என்ன செய்வது என்ற யோசனையில்
பஸ்ஸில் வீட்டிற்கு பயணம் ’
இன்னொரு மூலையில் நிஜாமாவே வந்துவிட்ட காய்சலால்
ஒரு நாள் விடுப்பு கேட்ட கண்ணம்மாவிற்கோ
வீட்டுக்கார அம்மாள் மகளிர் விழாபற்றி பேசவேண்டியுள்ளது
அதனால் இன்னிக்கு விடுப்பு கேட்காதே என்ற கத்தலுடன்
மறுத்தால் மாதசம்பளம் கைக்குவராதே
என்ற கவலையில் முனங்களுடன் பாத்திரம் தேய்க்கும்
கண்ணம்மாவிற்கும் கீதாவிற்கும் இப்படித்தான் கழிந்தது,மகளிர் தினம்!!  

3/01/2013

சீனா வல்லரசு பாதையில்.....


சீனா ஏன் வல்லரசு பாதையில்……

சீனா வல்லரசு பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று அமெரிக்கா, இந்தியர்களாகிய நாமும் எரிச்சலோடு பார்த்து கொண்டிருக்கிறோம். அந்த பாதையில் நடைபோட சீனாவிற்கு ஒத்துழைப்பு முழுமூச்சோடு தருவது இந்த மக்களின் அயராத உழைப்பு. வயதானாலும் தன்னால் ஆன வேலைகளை பார்த்து குடும்பத்திற்கு என்று தன்னாலான பங்கை அளிக்கும் வயதானவர்கள். 60 வயதிலும் தன்பேரனோடு பள்ளிசெல்லும் தாத்தா, பாட்டிகள்.,எல்லாதுறைகளிலும் தன்காலடிகளை பதிக்கும் பெண்கள். வீட்டில் வம்பு பேசிகொண்டிருக்காமல், சீரியல் எல்லாம் பார்த்து கொண்டிருக்காமல் வேலை, தொழில், அழகு கலை, வணிகதுறை என்று பறந்துகொண்டிருக்கும் பெண்கள்எல்லோருக்குமே பங்கு உண்டு.

முதல்ல சீனர்களும், ஜப்பானியர்களும் நேரம் என்பது அவ்வளவு முக்கியம். அது அடிமட்ட தொழிலாளர்கள் கூட இது விதிவிலக்கல்ல. பள்ளி பேருந்து 7.50 கு நிறுத்தத்திற்கு வரும் என்றால் கண்டிப்பாக அதே நேரத்திற்கு வந்து நிற்கும். நிமிஷமா ஏறி உடனே காணாமல் சென்று விடும். டிரெயினும் இதே வந்து சேரும் நேரம் 2.30 என்றால் கண்டிப்பாக 2.25 முதல் 2.28 வந்துசேர்ந்துவிடும். அது புல்லட் டிரெயின், மெட்ரோ ரெயிலிலும் ,பேருந்திலும் கூட இதே நடைமுறை தான். காலை நேரத்தில் கொஞ்சம் கூட்டம் இருந்தால் உடனே வரிசையில் நிற்கும் வழக்கம், ரயில், பேருந்து எல்லா இடத்திலும் தாழ்னிலை தளம் தான், கண் தெரியாதவர்களுக்கென்று தனிபாதைகள் , ஒரே இடத்தில், நகரங்களில் கூட்டம் குவிவதை தடுக்க 3 தர, 4 தர  வரிசைபடி ஊர்களை விரிவாக்கி விமான மற்றும், தரைவழி ,மெட்ரோ ,என்ற எல்லா வசதிகளையும் செய்து குடுத்து பின் தொழில் துடங்குபவர்களை ஊக்குவித்து அவர்களுக்கு எல்லாவித வசதிகளையும் செய்து தருகிறது அரசாங்கம். எல்லா கிராமங்களையும் அதிவிரைவு சாலைகளால் இணைத்திருக்கிறது.  70 வருட லீஸ் என்ற கையொப்பம் இட்டவுடன் அவர்கள் நடவடிக்கையில் துளிகூட குறுக்கீடு இல்லை என்பது 100% உண்மை.  எல்லோருக்கும் 100 சதவிதம் கல்வி என்ற திட்டத்தை முன்னிறுத்தி செயல் பட்டுகொண்டிருக்கிறது சீனா. தொலை தொடர்பு, கட்டிட கலையிலும் சீனா இப்போது எல்லா நாடுகளுக்கும் சாவால் விட்டு கொண்டிருக்கிறது. மைனஸ் 20 டிகிரியிலும் வேலைக்கு வர தயங்காத பணியாளர்கள், வாங்கும் சம்பளத்திற்கு உழைப்பை கொட்டும் உழைப்பாளர்கள் இவர்களால் தான் சாத்தியம் ஒரு நாடு வல்லரசு பாதையில் போவதற்கு. பெய்ஜிங் ஒலிம்பிக்கிலிருந்து அசுர வேகத்தில் வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறது சீனா. செய்யும் வேலைகளை தவறு இருந்தால் தாட்சண்யம் பார்க்காமல் எடுக்கும் நடவடிக்கை, டாக்ஸி ஓட்டுனர்கள் நான்கு தடவைக்கு மேல் அனுமதியில்லாத பார்க்கிங்கில் நிறுத்தினால் கூட அடுத்த வருடம் அவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்ற சட்டங்கள். நாட்டு பற்று அளவுக்கதிகம். இந்த மக்களிடம். சுற்றுலாதுறையிலிம் உலகளவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது சீனா. திபெத் மலைபாதையில் டிரெயின் போக்குவரத்து வசதி செய்து 3 நாட்களில் இரயிலில் பெய்ஜிங்கிலிருந்து திபெத் சென்று விடலாம். அந்த ரயில் பாதை அமைத்தது எல்லா நாடுகளையும் பெருமுச்சு விடசெய்தது. ஏனெனில் உருகும் பனிகட்டி, 4 மணிக்கு மேல் இருட்டு போர்வை போர்த்திகொண்டிருக்கும் வழிபாதைகள், இரொப்பிய நிறுவனத்திடம் மலைபாதை அமைக்கவேண்டும் என்று கூறியபோது அந்த நிறுவனம் சாத்தியமே இல்லை என்ற சொல்லை ஒரு உத்வேகத்தோடு எடுத்துகொண்டு மலைபாதையில் ரயில் பாதை அமைத்து சாதனை புரிந்தது. ஒலிம்பிக்கில் தங்கம் வாங்குவதோடு மட்டுமன்றி எல்லா வேலைகளையும் திறம்பட செய்ய இந்த மக்கள் முயற்சித்து வருகிறார்கள். -20 ல் கூட ஒரு ஷார்ட்ஸ் போட்டுகொண்டு தன்னுடைய பயிற்சியை செய்துகொண்டிருப்பார்கள் இளைஞர்கள். இதெல்லாம் நமக்கு சாத்தியமானால் நமது வல்லரசு கனவும் சாத்தியமாகும்.     


2/27/2013

நட்பு

உன்மனம் உடையாமலும், புண்படாமலும் இருக்க
என்னால் எதுவும் செய்ய முடியாமல் போனாலும்
உனக்காக அழவும், உன்மனதை இதமாக வருடிக்கொடுக்க
என்னால் இயலும்...உடைந்த உன்மனதை
சரிசெய்ய, நீ மீண்டும் துளிர்விட.....

2/24/2013


தமிழ் சீரியலில் பெண்கள்


சினிமா மவுசு குறைந்து பெருமளவு வீட்டு பெண்களை கட்டிபோட்ட பெருமை சின்னதிரை சீரியல்களையே சேரும். சின்னதிரை சீரியல்கள் பெரும்பாலும் மெகாசீரியல் ரசிக கண்மணிகளை பொறுத்து அமைகிறது. என் பசங்க அம்மா சீரியல் பாக்காதே ஒரு மாசத்திற்கு ஒரு தரம் பாத்தாகூட உனக்கு எல்லா கதையில் நிலவரமும் தெரிந்து விடும் என்று கலாட்டா செய்வார்கள். டில்லியிலிருந்த போதே சிரியலுக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டேன். அலைகள், விடாது கருப்பு, கிருஷ்ண தாசி எல்லாரது மனங்களையும் ஒரு புரட்டி போட்டது. அடுத்து என்ன என்ற ஒரு பரபரப்பு சூழ்ந்து கொள்ளும். இப்போது கடவுளே, திருப்பம் என்ற பெயரில் பெண்களை இத்தனை கொடுமைகாரிகளாக சித்தரித்து கொண்டிருக்கிறது. குடும்ப பெண்கள் கொலைசெய்வார்கள்,  நினைத்தால் ஆள்களை ஏவிவிட்டு குண்டு வைப்பார்கள், இன்னும் என்ன எல்லாம் செய்ய வைக்க இந்த பெண்களை போகிறார்களோ  சின்னதிரை இயக்குநர்கள்.. என்ன வேண்டுமானால் செய்வார்கள் இந்த பெண்கள் என்று சித்தரிக்கும் சீரியல்களில் கடுகத்தனையும் உண்மை இல்லை. ஆனால் எப்படி இந்த பெண்கள் தன் இனத்தையே கேலிசெய்வதை பொறுத்துகொண்டு அதையும் தாண்டி பார்த்து இந்த சீரியல்களை வெற்றி பெற செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்கு புரியாத புதிராகவே உள்ளது. சீரியலுக்கும் வாழ்க்கைக்கும் முடிச்சு போடகூடாது என்று வாதம் இருக்குமானால் விஸ்வரூபம் பிரச்சினைக்கு இத்தனை எதிர்ப்பு கிளம்பியிருக்காதே. எல்லோருமே வாழ்க்கையோடுதானே இணைத்து பார்க்கின்றனர். ஒரு சீரியலில் ஒரு பெண்ணை தாவூத் இப்பராகிம் ரேஞ்சுக்கு வில்லியாக்கிவிடுவது தமிழ் சீரியல்களில் மட்டுமே சாத்தியம். சீரியலில் ஆண்களை விட பெண்களே அதிக வில்லிகளாக அவதாரமெடுக்கின்றனர். இன்னும் போனால் கால போக்கில் பின்லேடன் மாதிரி பயங்கரவாதிகளாக சீரியல் பெண்மணிகள் உருவாக இயக்குனர்கள் சிந்திக்கலாம். சீனாவில் பெண்கள் சீரியல் டிவி என்று வீணாக பொழுதை கழிப்பதில்லை. அவர்கள் நிறைய நம்மிலிருந்து வேறுபட்டு சிந்திக்கிறார்கள். எப்போதும் பரபர என்று இயங்கி கொண்டிருப்பதை பார்த்தால் மலைக்கதான் வைக்கிறது. ஒரு பெண் எல்லா வேலையும் செய்வாள். ஆண்களுக்கு நிகராக விளையாட்டரங்கிலும் வெற்றிகனி பறித்து கொண்டிருக்கிறார்கள்..பேருந்து ஓட்டுனர், டாக்ஸி,எல்லாவற்றையும் விட பிஸினஸில் கொடிகட்டி இந்த பெண்கள் பறக்கிறார்கள்.  நம் ஊரிலும் பெண்கள் தனது வீட்டைவிட்டு வெளியில் வந்து இன்னும் நிறைய சாதிக்கலாமே என்ற வருத்தம் இழையோடுகிறது.          

2/22/2013

அகரமிட்டு சிகரம் தொடு: தமக்கையின் வலையகம்

அகரமிட்டு சிகரம் தொடு: தமக்கையின் வலையகம்: http://chinaintamil.blogspot.hk/  இவ் வலையகத்தின் உள்ளடக்கங்களே பின் வருவன     தமிழ் தேசப் பறவை சீனம் நோக்கி கூடமைத்தது ஏனோ பெய்ஜி...

2/13/2013

சீன புத்தாண்டு விழா

சினேக் வருட புத்தாண்டு திருவிழா சீனாவில் நடைபெற்று வருகிறது. எங்கு பார்த்தாலும் அலங்கர விளக்குகள், சிவப்பு கூண்டு விளக்குகள், மலர்களின் அலங்காரம் மனதை கொள்ளை கொள்கின்றன. சென்ற ஆண்டு தாய்லாந்து, கம்போடியா சென்றுவிட்டோம். இந்த ஆண்டு பெய்ஜிங்கின் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள முடிவு செய்தோம். ஏற்கனவே சீன மக்கள் இந்த கொண்டாட்டத்திற்கு ஒருவருட திட்டமிடுதலை செய்கின்றனர். 9 நாள் கொண்ட விடுமுறைக்கு தயார்செய...்துகொண்டு தனது ஊருக்கு செல்கின்றனர். அதனால் மெட்ரோ, பஸ் எல்லாம் காலியாக இருந்தது.
 எங்களுடைய ஒட்டுனரும், வீட்டு வேலைசெய்யும் உதவியாளர்களும் கூட ஒரு வாரம் விடுப்பு எடுத்துகொண்டு சென்று விட்டனர். அதனால் நாங்கள், இங்கிருக்கும் எங்களது நண்பர்கள் பெய்ஜிங்கின் ஒரு மூலை கூட விடாமல் சுற்றி பார்க்க திட்டமிட்டோம். பருவனிலை மைனஸ் 10 வரை. அதனால் எவ்வளவு உடைகள் அணிய முடியுமோ அவ்வளவு உடைகள் அணிந்து கொண்டோம்.

முதல் நாள் 798 என்ற இடத்திற்கு சென்றோம். எல்லோரது படைப்புகள் எல்லாம் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கும் இடம் அது. ஆனால் நாங்கள் சென்றிருந்த சமயம் அது மூடியிருந்தது. பணியாளர்கள் எல்லோரும் தம்தம் ஊர்களுக்கு சென்றுவிட்டதால் புத்தாண்டிற்கு பிறகு தான் மீண்டும் பார்வையாளர்களுக்கு அனுமதி. 40 பைசா குடுத்து பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தால் எவ்வளவு தூரமும் செல்லலாம். பேருந்து எல்லாம் தாழ்வு பேருந்து. பஸ்ஸில் ஹீட்டர் வசதி செய்யப்பட்டிருக்கும்.பேருந்திலும், மெட்ரோவிலும் சுத்தம் என்றால் அப்படி ஒரு சுத்தம். அவ்வப்போது டிக்கெட் எடுத்து கொள்ளலாம் அல்லது 20 யுவானுக்கு ஒரு கார்டு வாங்கி கொண்டால் அதை எப்போது வேண்டும் என்றாலும் ரீ சார்ஜ் செய்து கொள்ளலாம். முதலில் பேருந்தில் ஏறும்போதும் அந்த கார்டை கார்டு ரீடரிடம் எண்டரி செய்துகொண்டு செல்லவேண்டும். இறங்கும்போதும் கார்டை காண்பித்து எண்டரி செய்துகொள்ளவேண்டும். இல்லை எனில் 2 யுவான்
கழிக்கபட்டுவிடும். எண்டரி செய்தோமானால் 40 பைசாவுடன் முடிந்துவிடும். அதே மாதிரி தான் மெட்ரோவிலும் ஒரே ஸ்மார்ட் கார்டு பஸ், மெட்ரோ ரயில், டாக்ஸி எல்லாவற்றிற்கும் உபயோகபடுத்திக்கொள்ளலாம். டிரெய்ன் அப்பா பாரீஸீல் எல்லோரும் தடையை மீறி குதித்து சென்ற ஒழுங்கீனம் என்னை முகம் சுளிக்க வைத்தது. ஆனால் சீனா, ஜப்பான், கொரியாவில் ஒரே சிஸ்டத்துடன் கூடிய ஒழுங்கு முறை இருக்கும் அடுத்து செளவ்யாங் பார்க்கில் ஸ்பிரிங் கார்னிவெல் இருந்தது என்று சென்றால் கடைகள் மட்டும்
 தான் இருந்தது. எல்லா கடைகளிலும் பொம்மைகள்,விளையாட்டு சாமான்கள் எல்லாம் இருந்த்து, ஆனால் விற்பவர்கள் யாருமில்லை. ஆனாலும் யாரும் எந்த சாமானையும் எடுத்துகொண்டு செல்வதில்லை. திறந்தவெளி கடைகளை மட்டும் புகைபடம் எடுத்துகொண்டு.

இரண்டாம் நாள் கேபிடல் மியூஸியம் சென்றோம். 5 மாடிகள் கொண்ட மியூஸியத்தில் (நல்லவேளை இது மூடியிருக்கவில்லை) முதன் தளத்தில் எல்லா மதத்தின் அடையாள குறிகள், எல்லோரது மதத்தின் சின்னங்கள், எந்த நாடுகளில் எந்த மதம் பின்பற்றப்படுகிறது, பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்ற ஒளிபடம், வரைபடம், படங்கள் எல்லாம் இருந்தது. அடுத்து சீனாவின் போர்ஸலின் உபயோகங்கள், விதவிதமான போர்சலின் ஜாடிகள், குடுவைகள், தட்டுகள், காப்பி கோப்பைகள் என்ற அணிவரிசைகள் அலங்கரித்திருந்தன.
சீனத்து ராஜாக்களின் உடைகள், போர்தளவாடங்கள், வெண்கலத்தால் செய்யப்பட்ட பலவிதமான பொருள்கள், இருந்தன.



அதற்கடுத்த தளத்தில் சீனாவின் புத்தமத அறிமுகம் அதை பின்பற்றி சீனர்கள் அதை அவர்களுக்கேற்ப புத்தர், போதிசத்துவர், நமது சரஸ்வதி, போன்ற கடவுளர்களின் திருவுருவங்களை சீனத்து பாணியில் சற்றே மாற்றி அறிமுகம் செய்த புத்தரின் சிலைகள், சீனாவில் புத்த மதம் தோன்றிய வரலாறு, அழகான குட்டி சித்தார்தர் சிலை,எல்லாம் மிகவும் அழகு. அதை சீனர்கள் பராமரிக்கும் விதமும் அழகு தான். அடுத்த தளத்தில் சீனாவின் பெய்ஜிங் ஓபரா நாடகமும் நடந்தது.கடைசி தளத்தில் சீன வரலாறு அவர்கள் கண்டிபிடித்த வெடிபொருள்கள், காகிதம் பயன்பாடுகளின் குறிப்புகள், படங்கள் அதை கண்டுபிடித்தவர்களின் கெயெழுத்து பிரதிகள் எல்லாம் பத்திரமாக கண்காட்சியில்
வைக்கபட்டிருந்தன. ஒரு பக்கம் சீன வரலாறு மறுபக்கம் உலக வரலாற்று நிகழ்சிகள், போர்கள் நடந்த வரலாற்று குறிப்புகள் விளக்க படங்கள் எல்லாம் வரிசைபடுத்தபட்டுள்ளன. சீன விடுதலைக்கு போரிட்ட வீர்ர்கள், சீன கவிஞர்கள், அறிவியல் மேதைகள், கணித வல்லுனர்களின் குறிப்புகள் எல்லாம் கண்காட்சியில் இருந்தது. ஒருவழியாக பார்த்து முடித்துவிட்டு சீன வரலாற்றின் பக்கங்களை புரட்டிவிட்டு வந்தோம். அடுத்த நாள் பெரிய பெரிய பார்க்குகள், பள்ளி, கல்லூரி மைதானங்கள் எல்லாவற்றிலும் டெம்பிள் பேர் என்று சீன பாரம்பரிய கலைகள் பக்கம் பக்கமாக நடிபெறுகிறது. அதில் அவர்கள் நடனக்கள், தாய்ச்சி என்ற உடற்பயிற்சி, குங்பூ, நடனங்கள், எல்லாம் நடந்த வண்ணம் இருக்கின்றது. இதெல்லாம் பார்த்த எங்களுக்கு இழந்த சிறுவயது திருவிழா நியாபகங்களை மீட்டிஎடுத்து கொண்டு வந்தோம்.




 

12/05/2012

காஷ்மீர் பயணம்.

டில்லியிலிருந்து ஒன்றரைமணி நேர பயணம் ஸ்ரீநகர் .
அழகானஒரு மலைபாங்கான பிரதேசம் காஷ்மீர்..அதை நீண்ட நாட்களாக அந்த அளவு பயம்ஆனாலும் நமது நாட்டின் அழகை வாழ்வில் ஒரு தரமாவது தரிசிக்க ஆசை..அதனால் இந்த பயணம். ஒரு பயத்துடன் இருந்தோம். பார்க்க ஆசையாக இருந்ததால் இந்த முறை காஷ்மீர் பயணம் வாய்த்தது. ஆனால் மனசு முழுக்க பயம். திரும்ப வருவோமா என்றே தெரியவில்லை கொஞ்சம் இயல்பு வாழ்க்கை.திரும்ப ஆரம்பிக்கிறது. கஷ்மீரத்து மக்கள் மிகுந்த அன்பு கொண்டவர்கள். அவர்களுக்கு தெரிகிறது சுற்றுலா தான் அவர்களின் வாழ்கையின் ஆதாரம் என்று அதனால் இப்போது எல்லோரும் பயங்கரவாதத்திற்கு ஆதரவு தெரிவிப்பது இல்லை. அவர்கள் இழந்தது ஏராளமான உயிர்கள், அடிக்கடி மூடப்படும் கல்வி சாலைகள் ,கல்லூரிகள் அதனால் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டு படிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்ட துர்பாக்கியம்.. பாவப்பட்ட மக்களின் கண்களில் எதிர்காலம் கண்களில் கேள்வி குறியோடு
.ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு
.முதலில் நுழையும் முன்பே கார், மற்றும் நம்மையும் முதலில் சோதனை செய்கிறார்கள். அந்த வாயில் கடந்து சுமார் 2 அல்லது 3 கிலோமீட்டர் தள்ளி விமான நிலையம் இருக்கிறது. அங்கு சென்றவுடன் உள்ளே ஒரு பேக்கேஜ் எக்ஸ்ரே மிஷின் முடிந்த வுடன் பேக்கேஞ் செக்கிங் செய்யவேண்டும். ஹேண்பாக்கேஜ் முடிந்த உடன் நம்மையும் சோதனை செய்கிறார்கள். அது முடிந்த பின் பாக்கேஜ் செக்கிங் செய்து விட்டு பாக்கேஜில் அடையாளம் குறிப்பிடபடுகிறது. அந்த அடையாளம் குறிப்பிடபட்ட பாக்கேஜை மட்டும் தான் விமானத்தில் ஏற்றபடும். பயணியும் பயணம் செய்கிறார என்று ஊர்ஜிதம் செய்து கொள்ள படுகிறது. ஒரு வழியாக எல்லாம் முடிந்த்து என்று நடக்க துவங்கிய பொது விமானதுக்கு சற்று அருகில் ஒரு தடுபில் திரும்ப பயணிகளையும், ஹாண்ட் பேகேஜையும் சோதனை செய்கிறார்கள் .இத்தனை சோதனைகள் இருந்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏதாவது அசம்பாவிதங்கள் இருக்கிறது.
நாங்கள்போயிருந்த சமயம் ஒரே வெய்யில் தாங்க முடியவில்லை. ஊரின் பெரிய பாதி தால் லேக்தான் தனது அழகால் ஆக்ரமித்து கொண்டிருக்கிறது. அதில் காஷ்மீருக்கே உரிய படகு வீடுகள். எல்லாவற்றிற்கும் அழகாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. படகு வீடுகளுக்கு ஷிகாரா என்று பெயர். அங்கு கூட நாம் நமது தேவைகேற்ப தங்கலாம். படகிலேயே எல்லா வசதியும் இருக்கிறது. காஷ்மீர மக்களின் வாழ்வோடு ஒன்றியிருக்கிறது அவர்களின் படகு வீடு. நாம் படகில் செல்லூம்போது பக்கத்திலேயே மற்றொரு படகில் வந்து வியாபாரம் செய்கிறார்கள்.
ஸ்ரீ நகரில் 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரு மலையில் சிவன் கோவில் கட்டப்பட்டு இருக்கிறது. 2200 முன் அசோக சக்கர்வர்த்தியின் மகன் ஜலுக்கா இந்த கோவிலை கட்டியதாக சொல்கிறார்கள். இந்த கோவிலில் இருந்து தால் ஏரியின் முழு அழகையும் பார்க்கலாம். இந்த கோவிலில் பகவத்பாதர் ஆதிசங்கரர் சில நாட்கள் வந்து தியானத்தில் இருந்ததாக சரித்திர சான்றுகள் உள்ளது. 273 படிகளை கொண்ட.இக் கோவிலில் சிவ பெருமான் சன்னிதி உள்ளது. இந்த கோவிலை இப்போது சுலைமான் மலை என்று கூறுகிறார்கள்.



"ஷிகாரா - படகு வீடு”

குல் மார்க் ஒரு அழகான இயற்கை வளங்களை எல்லாம் தன்னகத்தே கொண்டிருக்கும் இடம். நாங்கள் குல்மார்க் போக காரில் ஏறிய போது ஒரு முகம் தெரியாத நபர் எங்களை பார்த்துவிட்டு ஸ்வெட்டர் ஏதும் எடுத்துகொள்ளவில்லையா அங்கு குளிரும் எந்த சமயத்திலும் மழை வரலாம் என்றார் அவரது பரிவு எங்களை நெகிழ வைத்தது. எங்கள் ஓட்டுனரும் ஷோஹில் மிகவும் நல்லவராக தெரிந்தார். அவர்தான் எங்களின் பயத்தை போக்கி காஷ்மீரை சுற்றி காட்டினார்.
குல்மார்கில்
பாபிலோனின் தொங்கும் தோட்டத்தை போல இங்கு மிதக்கும் தோட்டம் மிகவும் அதிசயம். எல்லா காய்கறிகள், பழங்கள்,கீரைவகைகள் கொண்ட தோட்டங்கள் ஒரே இடத்தில் நிற்காமல் மிதந்து கொண்டே இருக்கிறது. செடிகள் எல்லாம் நீண்டு வளர்ந்து பழங்களை கொண்டு இருக்கிறது. ஆனால் நாம் படகில் போகும்போது அந்த செடி கொடிகளும் நகர்ந்து நம்முடன் சேர்ந்து பயணித்து கொண்டிருக்கும் அழகை பார்க்க இரு கண்கள் போதாது...
குல்மார்க் பனிமலைகள், பனிசருக்கு விளையாட்டு, ரம்மியமான இயற்கை காட்சிகள் தான் குல்மார்கின் அழகு சின்னங்கள்
.காஷ்மிர் ஷால். காஷ்மிர் சில்க், கம்பளி, கார்பெட், கவினை பொருள்கள், குங்கும பூ எல்லாம் கிடைக்கிறது. பார்த்து வாங்க வேண்டும் துணிகளை.. நான் அப்படிதான் காஷ்மீர் சில்க் சுடிதார் செட் எடுத்தேன். நம் கண்முன்னால் தான் பேக் செய்தார்கள், ஆனால் பேண்ட் பீஸ் வைக்கவே இல்லை. இங்கு வந்தபுறம் தான் உண்மை தெரிந்தது. அதுமாதிரி சில விஷயங்கள் நடக்கின்றன வறுமையினால்இழப்பினால் தன் வளங்களை எல்லாம் இழந்து நிற்கிறது இப்போதைய காஷ்மீர்.ஊரில் இன்னுமும் தன் மக்களுக்கு தண்ணிர் கூட சரியாக கிடைக்காமல் மக்கள் சுற்றுலா குழுவினரது வாகன்ங்களை மறித்து போராட்டங்களை நட்த்துகின்றனர். பின் போலீஸ் வந்து தடியடி நட்த்தி கூட்ட்த்தை கலைக்கின்றனர்இது நாங்கள் போயிருந்த சமயம் பல தடவைகள் நடந்தது. இங்கு லோக்கல் சிம்காட் வாங்க முடியாது. நமது போனும் வேலை செய்யாது.நான்கு நாட்களும் எங்களை தொடர்புகொண்டு கிடைக்காமல் சிலர் பதறிவிட்டனர்... நாங்களும் நெருங்கிய சினேகிதர் தவிர யாரிடமும் சொல்லவில்லை. வேண்டாம் என்று தடுத்துவிடுவார்களோ என்ற பயம் தான் காரணம்
மீண்டும்இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப மக்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். காஷ்மீர்தனது இழந்த அழகை மீண்டும் சரி செய்து கொண்டிருக்கிறது. மாற்றம் நிலவி மீண்டும் தன் புது பொலிவுடன் வரவேண்டும் என்பதே என் ஆசைஅதற்கு காலமும் நேரமும் வரவேண்டும்…..

.

 


11/24/2012

கடவுளுக்கு தூது.

அம்மா எனக்காக சாமிகிட்டே வேண்டிக்கோ
இது குழந்தைகள் எப்போதும் என்னிடம் கூறுவது
அப்பாவும், சுற்றமும், உற்றாரும்,
நட்புகளும் எனக்காக நீ வேண்டிக்கோ,
கடவுளுக்கும் இவர்களுக்கும் நான் பாலமாக
நான் இவர்களுக்கு வேண்டி கொள்வது
எண்பது சதவிகிதம் பழுதில்லாமல் நடக்க
கடவுளிடன் நான் இட்ட விண்ணப்பம் மட்டும்
எப்போதும் போல் வெயிட்டிங் லிஸ்டில்...

6/29/2012

பயணம்

எல்லோரையும் வழி அனுப்பி வைக்கிறேன் அவர்கள் முன சோகத்தை காட்டாமல். அவர்களின் வெற்றிடத்தை நிரப்ப யாராவது வருவார்கள் ஆனால் அவர்கள் என் இதயத்தின் சிம்மாசனத்தை விட்டு இறங்குவதில்லை..புதியவர்கள், விட்டு பிரிந்தவர்கள் என்று எல்லொரையும் இழுத்து கொண்டு ஒரு ரெயில் பயணத்தில் என்றும் இனிய நினைவுகளுடன் நான்

பாசம்

உறவினரிடம் காட்டும் அன்பிற்கு பாசம்..
மற்றவர்களிடம் காட்டும் பரிவிற்கு அன்பு..
புன்னகை செய்தபடி போய் கொணடே இருப்பது , அன்பு, மாட்டிக்கொண்டு விழிப்பது பாசம்..

ஷின் நியான் குவாய்ல

உலகம்
ஷின் நியான் குவாய்ல!
Posted Date : 17:01 (23/01/2012)Last updated : 15:01 (24/01/2012)
- சுபஸ்ரீ மோகன்

சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்... அது, வசந்த காலம். ஆனால், சீன மக்களுக்கோ கசந்த காலம். 'நியான்' என்ற ஒரு காட்டு விலங்கு சீனாவில் ஒரு கிராமத்தின் மக்களை தினமும் இரவு நேரத்தில் தாக்கியது என்பது பழைய மரபுக்கதை. ஆடு, மாடு போன்ற விலங்குகள் மற்றும் தானியங்களையும் தின்று தீர்த்த அந்த விலங்கு, சின்னஞ்சிறு குழந்தைகளையும் விட்டுவைக்கவில்லை. அந்த ஊர் மக்கள், இரவு என்றாலே பயம் கொள்ள ஆரம்பித்தனர்.

இந்தக் கொடுமையில் இருந்து தப்ப, ஒரு வாய்ப்பை தேடிக்கொண்டு இருந்தனர். ஒரு நாள், சிறு குழந்தை அணிந்திருந்த சிவப்பு உடையையும், எங்கோ எரிந்துகொண்டிருந்த நெருப்பையும் கண்டு, நியான் பயந்து ஓடியதை மக்கள் பார்த்தனர்.

நியானின் கொடுமைகளில் இருந்து தப்ப, சிவப்பு நிற உடைகளையும், நெருப்பையும் காட்டி அதை விரட்டினர்!
பின்னர், ஒவ்வொரு ஆண்டின் வசந்த கால தொடக்கத்திலும், சீன மக்கள் தங்கள் வீடுகளின் முன், சிவப்பு நிற கூண்டு விளக்குகளை வைத்து, சிவப்பு உடைகளையும் அணிய தொடங்கினர்.
இந்த கலாசாரம் தான், இன்றும் வசந்த கால பண்டிகையாகவும், வருட பிறப்பாகவும், கொண்டாடப்படுகிறது!

சீன புத்தாண்டு... ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு விலங்கின் பெயரால் அழைக்கப்படுகிறது. இப்படி 12 விலங்குகளின் பெயரில் ஆண்டுகள் உள்ளன. இந்த ஆண்டின் பெயர் 'டிராகன்'.

சீன வருட பிறப்பை, இந்த ஆண்டு இன்று (ஜனவரி 23) தொடங்கி ஜனவரி 25 வரை கோலாகலமாக கொண்டாடுகிறார்கள்.

நாடே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. வீதி எங்கும் சிவப்பு வண்ண கூண்டு விளக்குகளின் அணிவரிசை, தோரணங்களின் அலங்காரம்!

சிவப்பு மலர்களையும், சிவப்பு வண்ணங்களில் நல்லதைக் குறிக்கும் வாசகங்களையும் கொண்டு, வீடு, தெரு, மற்றும் கடைகளை அலங்கரித்துள்ளனர்.

சிவப்பு வண்ணம் நெருப்பை குறிக்கும். ஆதலால், குழந்தைகளுக்கு பரிசுகள் கூட சிவப்பு நிற உறையில் வைத்து கொடுக்கப்படுகிறது. இந்த விழாவில், பாரம்பரிய நடனமான டிராகன் நடனம் மற்றும் வண்ண வானவெடி வேடிக்கையும் முக்கிய நிகழ்வுகளாகும்.

இந்தப் பண்டிகையின் சிறப்பு அம்சம் என்னவென்றால், அமெரிக்காவில் கொண்டாடப்படும் நன்றி நவிலும் நாள், தமிழகத்தின் காணும் பொங்கல் பண்டிகையைப் போல இது குடும்பங்கள் ஒன்று சேரும் திருநாள் என்பதே.

வருடம் முழுதும் எங்கெங்கோ இருந்தாலும், சீன வருடப் பிறப்பின்போது குடும்பங்கள் ஒன்று சேர்ந்து விருந்துண்டு மகிழ்வது வழக்கம். இந்தத் திருநாளன்று எட்டு அல்லது ஒன்பது உணவு வகைகள் தயாரிக்கப்படுகிறது. எட்டு என்ற எண் - செல்வ செழிப்பையும், ஒன்பது என்ற எண் - நீண்ட ஆயுளையும் குறிக்கிறது.
நகரத்தில் வேலை பார்க்கும் மக்கள், சீன புத்தாண்டின்போது தம் சொந்த ஊருக்கு சென்றுவிடுவதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இந்த சமயத்தில் வர்த்தகம் மற்றும் வணிக பரிமாற்றமும் பாதிக்கபடுகிறது.

இந்த விழா நேரத்தில், இந்தியாவின் தீபாவளியைப் போல், நாடே ஸ்தம்பித்து போகிறது. அரசாங்கமும் தனது விடுமுறை நாட்களை இந்த விழாவுக்கு ஏற்றார்போல் அறிவிக்கிறது.

சீனா மிக அதிகமாக ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்வதால், மற்ற நாடுகள் இதற்கேற்றார்போல் தம் வர்தக பரிமாற்றங்களை அனுசரித்துகொள்கின்றன.

இன்று உலகளவில் நாம் பிரமிக்கும் நாடுகளில் சீனாவும் ஒன்றாக உள்ளது. இந்நாட்டு மக்களின் உழைப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் கலாசார ஒற்றுமைதான் நம் பிரமிப்புக்கு காரணம். சீனப் புத்தாண்டு, இந்த பழமையையும் கலாசார ஒற்றுமையையும் பிரதிபலிக்கிறது.
அனைவருக்கும் ஷின் நியான் குவாய்ல... அதாவது, சீனப் புத்தாண்டு வாழ்த்துகள்!

தாய்லாந்து தரிசனம்.


விழிகளுக்கு விருந்தளித்த தாய்லாந்து தரிசனம்!
Posted Date : 14:03 (02/03/2012)Last updated : 17:03 (02/03/2012)
கட்டுரை, படங்கள்: சுபாஸ்ரீ மோகன்


உலகின் சிறந்த சுற்றுலா நாடுகளுள் ஒன்று, தாய்லாந்து. இந்நாட்டை வலம்வர வேண்டும் என்ற ஆவல், அண்மையில் நிறைவேறியது.

பீஜிங் விமான நிலையத்தில் இருந்து பாங்காக் வந்து சேர்ந்தோம். தாய்லாந்தின் சுவர்ணபூமி விமான நிலையம் இனிதே வரவேற்றது. விமான நிலையத்தில், தேவர்கள...ும் அசுரர்களும் வாசுகியை கொண்டு பாற்கடலை கடையும் பிரமாண்டமான சிற்பம் வியப்பில் ஆழ்த்தியது. இந்திய கலாசாரத்தின் அடையாளம் மிக ஆழமாக அங்கு பதிந்திருப்பதை உணர முடிந்தது.

தாய்லாந்து தலை நகரம் பாங்காக். தாய் நாணயம் 'பாட்' என்று அழைக்கபடுகிறது. இந்திய குடிமக்களுக்கு இங்கு நுழைவனுமதி (விசா), பாங்காக் விமான நிலையத்திலே மிகவும் எளிதாக வழங்கப்படுகிறது. 


 அன்றிரவு தங்கும் விடுதிக்கு செல்லும் வழியில் ஓட்டுனரிடமே தாய்லாந்தின் கலாசாரத்தை பற்றி சில விஷயங்களை தெரிந்துக்கொண்டோம். மறுநாள் பாங்காக்கை சுற்றிப் பார்க்க கிளம்பினோம்.

காலையில் வெவ்வேறு புத்தர் கோயில்களை தரிசிக்கச் சென்றோம். எல்லா கோயில்களும் பிரமாண்டம் என்றாலும், குறிப்பாக வாட்போ எனும் பள்ளிக்கொண்டிருக்கும் புத்தர் கோயில் எல்லோரையும் அசரவைத்தது. தங்கத்தினால் அமைக்கபட்ட இந்தப் புத்தர் சிலையின் எடை சுமார் ஐந்து டன்!

சுற்றுலா செல்லும்போது வழிகாட்டியிடம் தாய்லாந்தை பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்துக்கொண்டோம். அதில் சில தகவல்கள்...



தாய்லாந்து மிகவும் அழகான தென்கிழக்கு ஆசிய நாடு. தாய்லாந்து மொழியில் 'தாய்' என்றால் சுதந்திரம் என்று பொருள். யாருடைய ஆதிக்கத்துக்கும் கட்டுப்படாமல் இருந்த ஒரே ஆசிய நாடு இதுதான்.

புகைவண்டி வசதியும் தரைவழி போக்குவரத்து வசதியும் இல்லாத காரணத்தால், எல்லா செயல்களும் நீர்ப் போக்குவரத்தின் மூலமாகவே நடைபெற்றது. நீர் நிலைகளையும், ஆறுகள், பாசன வசதிகள் போன்றவற்றை தங்களது (தாய் மக்கள்) கட்டுபாட்டுலேயே வைத்து இருந்ததினால், அந்நிய நாட்டினரது ஆக்கிரமிப்பு எதுவும் நிகழவில்லை.

 இங்கு இன்றளவும் மன்னர் ஆட்சி தான் நடைமுறையில் உள்ளது. மன்னரை தெய்வமாக வணங்குகிறார்கள். பொது இடங்களில் மன்னரின் திருவுருவ புகைப்படங்கள் ஆங்காங்கே தென்படுகிறது.

 தாய்லாந்தில் ஏராளமான இந்தியர்கள் வசிக்கிறார்கள். 'லிட்டில் இந்தியா' எனக் கூறப்படும் பஹுரத் என்ற இடத்தில் இந்திய உணவு விடுதிகளும், இந்தியப் பொருட்களும் கிடைக்கிறது. சிவன், லட்சுமி மற்றும் விஷ்ணு கோயில்களும் இங்கு உள்ளன.

மலையும், மலைச்சார்ந்த நீர் வளமும், இயற்கை வளங்களையும் தன்னகத்தே கொண்ட வளமான தாய்லாந்தில், வழி எங்கும் ஏராளமான கடற்கரைகளும், தென்னை மரங்களையும் பார்க்கும்போது கேரளா நினைவுக்கு வருகிறது. இந்தக் கடற்கரைகள் வெளிநாட்டுப் பயணிகளையும் குழந்தைகளையும் வெகுவாக கவர்கின்றன.

சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டாலும், நிவாரணப் பணிகள் துரிதமாக நடைபெற்றதால், தாய்லாந்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வரத்து குறையவே இல்லை!